18 நவ., 2014

படைப்பு மனம்,,,,



                                    

நடை பயிற்சி முடிவடைந்து களைப்பார பூங்காவின் மையப்பகுதியில் உள்ள கல் இருக்கையில் கால்களை நீட்டி ஆசுவாசமடைந்தான் செந்தில்.

புளியமரஇலைகளில் படிந்த சூரிய கதிர்கள் தகதகவென மினு மினுத்து கரிசல் மண்ணில் கலந்தோடிக்கொண்டிருந்தது. அருகாமைவீட்டிலிருந்தசூலமங் கலம் சகோதிரிகளின் கந்த சஷ்ட்டி கவசம் ஒலித்துக்கொண்டிருந்தது.

‘’சஷ்ட்டியை நோக்க சரவண பவணா சிஷ்ட்டருக்கு உதவும் செந்தமிழ் வேலா, பாதம் இரண்டினில் பண்மனிச்சதங்கை கீதம் பாட கிங்கினியாட’’ என்று இளம் காற்றில் தவழ்ந்து வந்து செவி மேவி சாந்தம்மாக்க, முந்திய நாள் பெய்த மழை நீரில்காக்கைகள் சிறகு பரப்பி சோம்பல் முறிக்க, வடக்கு மூலையில் ஆண் மயில் தோகைவிரித்துசூரியகதிகளுக்கு இணையாக போட்டியிட்டு ஆடிக் கொண்டே அகவிபெண்மயிலைகவர பல விதங்களில் நடனமாடி தன் உயிர் நீரைஉமிழ்ந்தது. பெண்மயில் கெக்..கெக்..கெக்கென அகவிக் கொண்டே ஆண் மயில் உமிழ்ந்த உயிர் நீரை கொத்தி விழுங்கிவிட்டு பரந்துச்சென்றது.

செந்தில் எழுந்து நடக்காரம்பித்தான். அப்போது கைபேசி அவனுக்கு பிடித்த ராகத்தில்பாடியது.

செவியில் பொருத்தி ‘’வணக்கம் செந்தில்’’ என்றான்.

‘’வாழ்த்துக்கள் செந்தில்’’ என்றது மறுமுனை.

‘’என்ன காலையிலே வாழ்த்து சொல்றிங்க சார்?

‘’உங்க கவிதை பிரசுரம் ஆகியிருக்குல’’

‘’அப்படியா...?’’

‘’ஆமா அற்புதமான கவிதை’’

‘’நன்றி சார்’’

இருவருக்குமான உரையாடல் துண்டிப்பானது செந்திலின் மனதில் அந்த கவிதை எழுதிய சூழல் அதன் கருத்து மற்றும் அதை பிரசுரம் செய்ய எடுத்துக் கிட்ட முயற்சியைப்பற்றி அசைப்போட்டபடி நகரத்தின் மைய பகுதிக்கு வந்து பத்திரிக்கை மற்றும் இதழ்கள் விற்பனை செய்திடும் கடையில் நின்று அவன் கவிதை வந்திருக்கும் காலண்டு இதழ் வந்திருக்கா என பார்த்தான் மற்ற இதழ்கள் வரிசையாக தொங்கிக்கொண்டிருந்தன. ஆனால் அந்த இதழ் இல்லை மறுபடிபொறுமையாகப்பார்ததான்.இல்லைகடைக்குள்இருக்குமா,,,பார்த்தான் இல்லைஎதற்கும்கடைக்காரரிடமேகேட்போமேஎனஅவன்அறிவுக்குஇப்போது தான் தோன்றியது.

‘’அண்ணாச்சிஅந்த பொஸ்த்தகம் இருக்கா’’ ?

‘’இருக்கு ‘’என அப்போதுதான் வந்திருந்த புதிய கட்டை பிரித்து எடுத்துக் கொடுத்தார்.பெற்றுக்கொண்டுஅதன்முன்பின் அட்டைப்படங்களை பார்த்தான் அதில்உள்ளபடங்கள்தலைப்புச்செய்திகள்அவனுக்குமுக்கியமாகபடவில்லை  முதல்பக்கத்தைபுரட்டிப்பார்த்தான்.பொருளடக்கத்தில்உள்ளபெயர்பட்டியலை பார்த்தான்.முதலில் கட்டுரையின் தலைப்பும் அதை எழுதியவர்களின் பெயர்க ளும் இருந்தது. அதற்கடுத்து அயல்நாட்டு எழுத்தாளரின் நேர்காணல் பற்றிய விவரமும் இதற்கடுத்து தமிழின் மிக முக்கிய நாவல் பற்றிய மதிப்புரை அதை எழுதியவரின்பெயர்அடுத்துஇரண்டுசிறுகதைகள் தலைப்பு அதன் ஆசிரியரின் பெயர், அடுத்து பிரபல ஓவியரின் ஓவியம் பற்றிய ஆய்வுக்கட்டுரை ஆய் வறி ந்தவரின் பெயர், பின்பு உணவுபற்றிய பத்தி அதை பதிவுருத்திய எழுத்தாளர் பெயர், அடுத்துதான் அவன் எதிர்பார்த்த கவிதை பட்டியல்.

முதலில் மூன்று கவிதாயினிகளின் கவிதைகள். முதல் இரண்டு பெண்களின் உடலரசியல்சார்ந்தகவிதைகள்,அடுத்துகிராமத்து பண்பாட்டின் அடையாளமு ம் அதில் வாழ்ந்த மூதாதையர்கள் பற்றியஆங்கிலபேராசிரியகவிதாயினியின் கவிதையும், அதற்கடுத்து மிக முக்கிய தமிழ் கவிஞர்களின் கவிதைகள் ஒன்று அரசியல் கட்சியின் சின்னத்திற்கு பக்கத்தில் என தலைப்பிட்ட கவிதையும் மற்றொன்றுகுடும்பத்தில்இருப்பின்றிபின்னிரவில்திசையற்றுஅலைந்துதிரியும் பரிதாபத்திற்குரியகவிஞனின்இழந்தவாழ்வின்மீட்புக்குறித்தகவிதையும்,மூன்றா வது குடிக்கான நியாயம் கற்ப்பிக்கும் கவிதையும், அவர்களின் பெயர் பட்டியல் புகைபடமும் இவர்களோடு இறுதியாக செந்திலின் பெண்ணிய கவிதையும் அவனின் புகைப்படமும் இடம் பிடித்திருந்தது.

உடனே காகிதங்களை பட படவென புரட்டினான். காகிதங்கள் மின் விசிறியின் ஆழ்மையில் ஆட்ப்பட்ட மெலிதானவைகள் எப்படி படபடக்குமோ அதைப் போல் அவன் விரலிடுக்கில் படபடத்து நாற்பத்தியிராண்டாம் பக்கம் நிலை குத்தி நின்றது. கவிதை வரிகளை மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் ஒளி வேகத்தில் படித்தான். பின்பு அக்கம் பக்கம் பார்த்தான் நடு சந்தை பகுதி யாக இருந்தாலும் காலை பொழுதென்பதால் மனித நடமாட்டம் குறைவாகவே இருந்தது. சுற்று வட்டார பகுதியில் அமைந்திருக்கும் கோயில்களியிருந்து பக்தி பாமாலைகள் ஒலி பெருக்கியின் மூலம் ஒலித்துக்கொண்டிருந்தது. அவன் காதலிக்கு முதன் முறையாக தட்டி தடுமாறி கொடுக்கும் முத்தத் தைப்போல் கவிதை மேனியில் பதித்தான் அச்சின் நெடி அவனை கிறங்கடித்து நிறுத்தியது.

‘’இருபது ரூபா’’ என்ற கடைகாரரின் குரல் கேட்டு திடுக்கிட்டு ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து தந்து மீதம் பெற்றுக்கொண்டு மீண்டும் பூங்காவிற்கு விரைந்துச்சென்று பழைய கல் இருக்கையில் அமர்ந்தான். அப்போது சூரியன் மேலேறிக்கொண்டிருந்தமையால் இளம் வெயில் அவன் மீது பரவியது. சுற்றும் முற்றும் பார்த்தான் வடக்கு மூலையில் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார் கள் நடுத்தர வயதுடையவர்கள்.அவனுக்கு அடுத்து கல் இருக்கையில் ஐம்பது வயதை நெருங்கும் என சொல்ல முடியாத நபர் கால் முட்டிக்களை மடக்கி அமர்ந்தப்படி ஆழ்ந்திருந்தார்.

செந்தில் கவிதையை முதலில் மனதுக்குள் படித்துப்பார்த்தான் அது அவனுக்கு திருப்தியாகதெரியவில்லை.அதனால்அவனுக்குமட்டும்கேட்குமளவுக்கு வாசித் தான். அருகில் இருப்பவர் மெள்ள கவினித்தார் உடனே உற்சாகம் கிளம்பி பலத்த குரலில் வாசித்தான். அருகாமையில் இருப்பவர் அசூசை யடை ந்தவராக திரும்பிக்கொண்டார். பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ செந்திலும் புரிந்துக்கொண்டு வேறிடம் சென்று பார்த்தான்.

இரண்டு பெண்கள் தண்ணீர் குழாயில் பிளாஸ்ட்டிக் குடங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டிருந்தனர்.அவர்கள்முன்புபோய்வீரதீர அசகாய செயலைப் பற்றி எடுத்துரைக்கலாம் என பார்த்தான் அவர்களில் ஒரு பெண் தன்குடும் பத் தின் நிலைப்பற்றியும் அதை நடத்தும் அவளது நிலைப்பற்றிபுலம்பிக் கொண்டி ருந்தாள்.

‘’ஏக்காஅண்ணேந்தான்நல்லாசம்பாதிக்கிதுலேகொத்தனாருக்குஇப்பஎம்புட்டு சம்பளம் பாதியே செலவு செஞ்சாலும் மிச்சம் எம்புட்டு மிஞ்சும்’’

‘’அடிபோடிஇவளேநெதம் அரநூறு சம்பளம் வாங்கிட்டு பூராத்தையும் குடிச்சி புட்டு மிச்ச மீதிக்கி கெளப்புக் கடயிலே தின்னுட்டு இருபதோ முப்பதோ சட்ட பைக்குள்ள இருக்கும் அதையும் பாவிபய குடுக்க மாட்டான் இதுல வாரத்துல ரெண்டு நா மூனு நாத்தான் வேலைக்கு போறது அதே வைச்சி வாரவட்டி கட்டு றதாவயித்தகழுவுறதா’’எனசொல்லிகண்கலங்கினாள்.

செந்தில்வடக்குமூலைக்குசென்றுநின்றான்அங்குபூப்பந்துவிளையாடிக்கொண்டிருந்தவர்கள். காட்டு கூச்சல் போட்டு விளையாடிக்கொண்டியிருந்தார்கள்.

அவர்கள் பாடுஅவர்களுக்குஇவன்பாடுஇவனுக்குபூங்காவைவிட்டு வெளியே றி அருகிலிருக்கும் தேனீர் விடுதிக்கு சென்று தேனீர் தயாரிப்பவரிடம் ‘’ஒரு டீ’’ என்றான்.

‘’சீனி கம்மியா போடாமையா?’’ என்றார்.

‘’நெறயா போடுங்க’’

அவர் அவனையும் அவன் அணிந்திருக்கும் நடை பயிற்சி உடையவும் ஆய் வறிந்துவிட்டு ‘’இவன் வாக்கீங்க் வந்தவன் இல்ல இவனுக்கு எப்படி வேணாளும் டீ போடலாமென’’எனமுடிவுசெய்துக்கொண்டு ‘’சார் ஒக்காருங்க போட்டு தாரேன் என்றுகூறினார்தேனீர்தாயாரிப்பவர்.

செந்தில்தேனீர்விடுதியின்உள்ளறையில்சென்றுஅமர்ந்தான்.புதியதாகஅமைக்கப்பட்டிருந்த விடுதியின் தரை தளம் செராமிக் டைல்சால் இழைக்கப்பட்டிருந் தது. அதன்மீது பாலிமர்இருக்கைகள்.மத்தியில் டீபாயில்அதன்மீது அலுமினிய ஆஸ்ட்ரே. ஆஸ்ட்ரே இருந்தும்அதனுள்சிகரெட் புகைப்பவர்கள் கங்குகளையோ, சிகரெட் துண்டுகளையோஇட்டதாகதெரியவில்லைஅனைத்து டுபாக்கோ துகள்களும் டைல்சீல்விரவிக்கிடந்தது.விடுதிக்காரர்வாடிக்கையாளர்களுக்காகஎல்லாவற்
றை யும் விட்டுக்கொடுத்தே விற்பணை செய்யவேண்டிய அபத்த நிலையை நினைக்கையில் பரிதாபமாக இருக்கிறது.

நம்இருப்பிடத்தில்இது போன்று செய்வோமா என்று வாடிக்கையாளர்கள் உணர்ந்தால்புதியவிடுதிஎப்போதும்புதியதாகவேஇருக்கும். செந்தில் இருக்கை க்கு எதிரே நான்கு நபர்கள் நாளிதழ் செய்தியை பிரித்து மேய்ந்துக் கொண் டிருக்க, அவர்களுக்கு அடுத்து இரண்டு நபர்கள் அறையின் வடக்கு மூலை மட்டத்தில் மேல் உள்ள அரசு இலவச காணொலி பெட்டியில் ‘’கண்டாங்கி, கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு கண்ணாலே கிருக்கேத்தும் கஞ்சா வச்ச கண்ணு’’ என ஒளி ஒலி பரப்பிக்கொண்டிருப்பதை ரசித்துக்கொண்டிருக்க, செந் தில் கொண்டுவந்திருக்கும் மாத இதழை டீ பாயில் மீது மற்ற நாளிதழ்களோடு சேர்த்து வைத்தான்.

படித்துக்கொண்டிருப்போர் டீ பாயிலிருக்கும் மற்ற நாளிதழ்களை எடுத்து எடுத்து படித்தார்கள். ஆனால் செந்தில் கொண்டுவந்து டீபாயிலில் வைத்த மாத இதழை யாரும் தொட்டுக்கூட பார்க்கவில்லை. அதே நேரத்தில் நாளித ழையும் யாரும் முழுமையாக படிக்கவில்லை பக்க பக்கமாய் நுணிபுல் மேய்ந் தார் கள்.

பொருமையிழந்தசெந்தில்எழுந்துச்சென்றுகாணொலியின் இயக்கத்தை துண்டி த்தான். யாரும் கவனிக்காமலா? இருப்பார்கள் சில கணங்களில் காரிய காரர்கள் முழித்திருக்க முழியை தோண்டுவது இப்படித்தான் வாடிக்கையாளர் களின் மனசு பழகிப்போனதுதான் மின் நிறுத்தம் என யூகித்துக்கொண்டனர்.

அறையில் அதிகாலை என்றாளும் வெப்பம் தேங்கி நின்று சுழன்றடித்தது. அறையின்அமைதியைசாதகமாக்கிக்கொண்டு மாதயிதழில் உள்ள கவிதை யை மெள்ள படித்தான் அப்போது எதிரே அமர்ந்திருக்கும் ஒரு நபர் எழுந்து வந்து அவனருகில் அமர்ந்தார். செந்தில் கவிதை வரிகளை விரல் வைத்து மேலும் சத்தமாக படித்தான். அருகில் இருப்பவர் பின்பகுதியில் இருக்கும் சாளரத்தின் கதவை நன்றாக திறந்து வைத்து தன் சட்டை காலரை தூக்கிவிட்டார். செந்தில் கவனித்துவிட்டு அருகில் வந்துஅமர்ந்தவர் கவிதை யின் ஈர்ப்பால் வந்தவர் இல்லையென.. ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடந்து வாசித்துவிட்டு ‘’ ஆகா கவித.. கவித.. பிரமாதம், அற்புதம். என்று புகழாரம் சூட்டிக்கொண்டான். அதுஅவனுக்குகேவலமாக வோ,அதிகபட்சமா கவோ,தெரியவில்லை.எல்லோரும் அவனைகவனித்தனர். அதைபயன்படுத் திஅவன்வயதையெத்தவனிடம் ‘’அண்ணாச்சி ஒரு பிரமாதமான கவிதை வந்துருக்கு பாத்திங்களா?’’ என்றான் செந்தில்அவர்பதிலுக்கு ‘’அப்படியா?’’ எனவியப்போடுகேட்கவில்லை.தோல்வியில் துவண்டுவிடாமல் அருகில் இருப்பவரிடம் ‘’அண்ணே இது நா எழுதின கவித’’எனஇதழைதூக்கி காண்பித் தான். அவர் அதை பார்த்தார் அத்தா ட்சிக்கு அந்த இதழில் பிரசுரிக்கப்பட்ட புகை படத்தையும் காண்பித்தான். அதை பார்த்துவிட்டு ஒருவரிகூட படித்து பார்க்காமலயே‘’இது நீஎழுதியதா எவ்வளவு குடுத்தாங்க’’ எனறார். செந்தி லுக்குஏன் கேட்டோமென்றானது. உடனேஇதழை மடக்கிக்கொண்டு தேனீர் தயாரிப் பவரிடம் உரிய காசை செலுத்திவிட்டு விடுதி படியிறங்கியவன் திரும்பி வந்து மத்திய மின் யூக்கியை தூண்டி விட்டு விட்டு வெளியேறி னான்.அதைகவனித்த தேனீர் தயாரிப்பவரும், உரிமையாளரும் கையரு நிலை யில்.

பிரதானசாலைநெடுகிலும்சைக்கிள் மிதியோடு கவிதை வரிகளும், அதற்கான வெகுமதிகளும்சேர்ந்தே மிதிப்பட்டது. அப்போதுசெந்திலுக்குபழக்கமான எழுத் தாளர் சாலை ஓரத்தில் நடந்துக்கொண்டிருந்தார். அனேகமாக நடைபயிற்சி க்கு சென்று விட்டு மிகதாமதமாக வீடு திரும்பிக்கொண்டிருப்பதாக தெரிந்தது.

அவரருகில்தோளுரசிநின்றான்செந்தில்.அவர்சோடப்புட்டிகண்ணாடிவழியாக ஊடுறுவிப்பார்த்துவிட்டு படக்கென்று வேறு திசையில் திரும்பிக்கொண்டார். அதற்க்கான அர்த்தம் அவனுக்கு புரியாமல் தடுமாறினான் இருப்பினும் அவனே வழிந்து பேசத்துவங்கினான்.

‘வணக்கம்சார்’’

‘’ம்’’என தலையாட்டினார்.செந்தில் வெற்றி வேந்தனாய் மேலும் முன்னேறி னான்.

‘’சார் வாக்கிங்க் போயிட்டு வாறிங்களா?’’

‘’ஆமா’’

‘’ஒங்க கதையே படிச்சேன் சார்’’

‘’அப்படியா? எப்படி வந்துருக்கு’’ என உற்சாகமாய் கேட்டார்.

‘’பிரமாதம்சார்வயசானவங்கஎல்லாமே முடிஞ்சிப்போச்சின்னு நெனைக்குற வங்க ளுக்கு இன்னும் வாழ்க்கை மிச்சம் இருக்குன்னு சூட்சுமா சொல்லி இருங்கீங்க சார். சாகும் தருவாயில்க்கூட மண்ணைக்கிளறி ஒரு விதைய போட்டா அது விருச்சமாகி பூ பூத்து கனியாகி மரமாகி தோப்பாகும். அது உரு வாக நாம ஒரு தூண்டு கோலா இருந்தோம் என்பதை நினைக்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும். அதுவும் சாகும் தருவாயில் இருக்கும் வயதா னவர் அதை செய்கின்ற போது மலர்ந்து நிற்கும் தாவரத்தில் அவரின் அடுத்த வாழ்வியல் துவங்கிவிட்டதாக உணர்கிறார். அங்க மரணம் மரணித்து விடுகிறது. வாழ்க்கை என்பது வாழும் காலத்தில் நாம் செய்யும் செயலிருந்து துவங்கி அடுத்த தலை முறைக்கும் நீடிக்கும். அது பிறர்க்கு செய்யும் நன்மை, தீமைகளைப்பொறுத்து. மனித வளர்ச்சியானலும் சரி, இயற்கைக்கு செய்யும் காரியமானலும் சரி மனித வாழ்க்கையில் வாழ்ந்தோம்,செத்தோம் என்று இருக்காமல் இந்த பிரபஞ்சத்தில் ஏதோஒன்றைஅடையாளப்படுத்தி விட்டு போகவேண்டும்அப்பத்தான்மனிதன் வாழ்க்கை முழுமையடைகிறது என்பதை காத்திரமாககதையில்சொல்லிஇருக்கிங்க சார்’’ வாழ்த்துக்கள் சார்’’என்றான் செந்தில்.

அந்த எழுத்தாளர்அவன்மீதுகோபத்தில்இருந்தாலும் ஆரத்தழுவி முத்திட்டார். ‘’ நன்றி செந்தில் நன்றி இந்த கதெ வார இதழில் வந்து ஒரு வாரமாச்சி யாரும் இதுவரபேசினதெஇல்ல ஆனா நீங்க கதையே ஆழ்ந்து உள் வாங்கி மதிப்புரை தந்துட்டிங்க நன்றி செந்தில் நன்றி’’என்று கண்கலங்கினார்.

‘’இதுக்கெல்லாம்போய்கண்கலங்கிகிட்டுஒருகலைஞன்ஒருகலையை உருவாக்கி விட்டு அந்த கலையின் தன்மைப்பற்றி மற்றவர்கள் என்ன சொல் வார்கள்,எப்படிசொல்வார்கள். எனஏங்கிக்கொண்டிருக்கும் கலைஞனின் மன நிலைஇன்னோரு கலைஞனுக்குதான் சார் தெரியும். படிச்சத பகிர்ந்து கொள் வதும் படித்ததில் உள்ளகுறைநிறைகளைவிவாதிப்பதிலும் தான்சார்கலைஞர் களின் உண்மையான முகம் இருக்கு அதெ சொல்றதுலே எனக்குஎந்த தடையு ம் கிடையாது சார். ஒங்க கதைய போன வாரம் படிச்சிட்டு போன்போட்டேன் நீங்கஎடுக்கலே ...’’என இழுத்தான்.

‘’ஏன் எடுக்கனும் போன மாநாட்டுக்கு பாத்தது இப்பத்தான் பாக்குறேன் ஆறு மாசம்ஆச்சிஒருபோன்போடனும்ன்னுதோணல இப்ப மட்டும் போட்டா எடுப்பேனா?என்னாசொல்லிமாவட்டமாநாடுக்குகூட்டிக்கிட்டுபோனிஙக’’என்றுகேள்வி யாய் அவனை பார்த்தார் எழுத்தாளர்.

செந்தில் புருவம் சுருக்கி அவர் கேள்விக்கான விடை தேடினான். விடை அவரி டமே இருந்தது. அதை கேட்டு தன் தவறை உணர்ந்தான். ஆனாலும் அது அவன் செய்த தப்பு கிடையாது ஒரு அமைப்பின் கூட்டு தப்பு இருப்பினும் விளக்க மளிக்க வேண்டியது அவனின் கடமை பூதகரமாய் உருவெடுத்தது.

‘’சார் ஒங்க கோபம் நாயம்தான் ஆனா நான் மட்டும் முடிவெடுக்குறே விசயம் கிடையாது சார்’’

‘’நீங்கதானே சொன்னது’’

‘’மண்ணிக்கனும் சார் எங்க அமைப்புலே இருக்குறவங்கதான் மாநில மாநாடுக்கு பிரதிநிதியா போக முடியும் சார்’’

‘’நான் அதே சொல்லலே செந்தில் நம்ம மாவட்ட எழுத்தாளர்கள் புகைபடமும் அவர்களைப்பற்றிய விபரமும் மாநில மாநாடு வாசளில் கண்காட்சியா வைக்க போறேம் அதுல ஓங்களைப்பற்றியும் வைக்க போகிறோம்ன்னு சொன்னிங்களே அதுஎன்னாச்சி?கடேசிவரைக்கும் போட்டா வாங்க வரலே நான் ஒங்க மாநாடு வாசலுக்கு வந்து கடேசி நேரத்துலே கூட வந்து வாங்கினாலும் வாங்கு வீங்க ன்னு காத்திருந்தேன் ஆனா நீங்களோ அல்லது ஒங்களோட வந்து டொனேசன் வாங்குனவங்களோ யாரும் வரலகண்காட் சியை போய்பார்த்துட்டுஅழுதுட்டேன் தெரியுமா’’ என சொல்லிக்கொண்டே அழுது விட்டார்.

‘’தெரிஞ்சோ தெரியாமையோ ஒங்க மன உளச்சலுக்கு ஆளாகிட்டேன் மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் நான் சக எழுத்தாளர் அமைப்புக்குள்ள வரணும் அவரைப்பற்றி இந்த நாடே அறியனும்ன்னுதான் ஒங்ககிட்ட சொன் னேன் ஆனா அமைப்போட முடிவு என்பது பல அடுக்குகளில் இருந்து முடிவு செய்யப்பட்டு அதன்படி செயல்படுவது அதனாலதான் அமைப்பை சார்ந்த வர்கள் பற்றிய விபரம் மட்டும் கண்காட்சியில் இடம் பெற்றது.

‘’அப்பஒங்கஅமைப்புக்குள்ளஇருக்கிறவங்ககிட்டமட்டும்வசூல்செய்யவேண்டி யதுதானே ஏன் எங்ககிட்ட வசூல் செய்றீங்க’’

இதற்கு அவனிடம் பதில் இல்லை இருவருக்கும் இடையில் மெளனம் நிறைந்து வளிந்தது.

மெளனஇடைவெளியில்செந்திலின் மனதுக்குள் ‘’நாம நம் கவிதைப்பற்றி பேசுவ தற்கு நல்ல நட்பு கிடைத்து விட்டதேன்னு நெனச்சி வாயகுடுத்தா பழைய பாக்கி கழுத்தை நெறிக்கிதே இதுக்குதான் எதுக்கும் முன்னாடி நிக்க கூடாது நின்றா பதில் சொல்லித்தான் ஆகனும் இது என்ன நம்முடைய தப்பா அமைப்போட தப்பு நாம் எப்படி பொறுப்பாக முடியும். சாதாரண மனிதனாக இருந்தால் பதில் சொல்லி சமாதானபடுத்தமுடியும் ஒரு சிந்தனையாளனை, எழுத்தாளனை எப்படி சமாதானபடுத்த முடியும். அவன் உணர்ச்சி பிளம்பான வன்,எதையும்விமர்சனத்துக்குஉட்படுத்தியேபழகியவன்அவனை ஏமாற்ற முடியு மா? அல்லது வெற்று சொற்களால் அலங்கரிக்க முடியுமா?’’என மனதுக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.

அப்போது எழுத்தாளரின் வீடு அருகில் பேசிக்கொண்டே வந்துவிட்டார்கள். எழுத்தாளர் செந்திலுக்கு விடைகொடுக்கும் விதமாக சிரித்தப்படி வணக்கம் வைத்தார்.

செந்தில் சூழ்நிலை கைதியாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான். பெடலின் அழுத்ததில் சைக்கிள் சக்கரம் சுழல்வதைப்போன்று அவன் மனதுக்குள் ‘’சே நம்மகவிதையைபடிக்க கொடுக்கலாம் பாத்தா கதெ கந்தலாகி போனதே’’ என்று மனம் புழுங்கியபடி சைக்கிள் மிதியை வேகப்படுத்தினான் செந்தில்.

மத்திய சாலைக்கு வந்த செந்தில் நடந்தப்படி கைபேசியை உயிர்ப்பித்து இரண்டோரு நண்பர்களுக்கு வழிய பேசி உற்சாகத்தை உடலில் பூசிக்கொண்டு வீடு போய் சேர்ந்தான். வீட்டில் உள்ளவர்கள் படிக்கட்டும் என்று மைய அறையில் உள்ள மெத்தை இருக்கையில் இதழை விரித்து வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்று நீராடிவிட்டு வெளியே வந்தான். அவன் எதிர் பார்ப்புபடி அவன் மனைவி படித்துக்கொண்டிருந்தாள்.

‘’என்ன எப்படி இருக்கு’’என்றான்.

‘’இருக்கு’’என்றாள்.

‘’அய்யா தெறமே எப்படி’’

‘’ம் தெறமையே சம்பாதிக்கிறதுலே காட்டுங்க இது உப்பு மெளகுக்கு கூட ஆகாது’’என்றாள்.

அவ்வளவுதான் காலை உணவையும், நண்பகள் உணவையும் துறந்துவிட்டு வீட்டிலிருந்துவெளியேறிஅலுவலகத்துக்குதன்வாகனத்தில்பயணித்தான்.                                                

8 அக்., 2014

குலவிருத்தி,,,, (சிறுகதை)

                         
சேவல் இறகில் படிந்திருந்த இரவை சிறகடித்து உதறி கிழக்கு அடி வானை கொத்தியது.கொத்துப்பட்டயிடத்திலிருந்துகுறுதிபெருக்கெடுத்துஅடி வானில் பரவியது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை நீர் வெள்ளப் பெருக்கெ டுத்து கிழக்குக்நோக்கிசென்றுகுண்டாற்றில்கலந்துஓடியது.

ஆற்றின் கரையில் உள்ள நாணல் தட்டைகள், மேட்டு பகுதியில் உள்ள மூங்கில் குத்துக்குள் ஓங்கியுயர்ந்து வளந்திருக்கும் உன்னிமார் குச்சி, சீத்தாக் குச்சி, சங்ககுச்சி, நொச்சி குச்சி, அழிஞ்சிக்குச்சி. போன்ற குச்சி களை வெட்டி பஞ்சாரக்கூடை முடைவதற்க்காக நான்கு ஆண்கள் மூங்கில் குத்துக்குள் நுழைந்தனர்.

முதல் நபர் கொண்டு வந்திருக்கும் பண்னை அரிவாளலை கிழே வைத்தார்., இரண்டாம் நபர் வலது கக்கத்தில் இடுக்கிறுந்த சிகப்பு மஞ்சல்வர்ணசேவலை தரையில் இறக்கிக்விட்டார்.அது கழுத்தை வெட்டி,வெட்டிமூங்கில்குத்துக்குள் பாய்ந்துச்செல்ல எத்தனித்தது. மூன்றாம் நபர் தலையில் சுடுமாடுக் கட்டி தூக்கி வந்திருந்த கள்ளுப்பானையை கீழ் மேல் சிந்தாமல் இறக்கிவைத்தார். அது பானையின் வண்டுக்கட்டை மீறி நுறை ததும்பியது. கள் வடிந்துப் போய் விடும் என்றாமையால் தரையில் பானையின் அடிபாகத் திற்க்கேற்ப குழிப் பரித்துஅதன்மீதுவைக்கவும் சரியாகநின்றுக் கொண்டது.நான்காம்நபர் ஆனச் சட்டியில் கொண்டு வந்திருந்த குதிரைவளிச் சோற்றை விருச மரத்தண்டில் கட்டித்தொங்கவிட்டார்.

முதல் நபர் அரிவாளை எடுத்து நிற்க, இரண்டாம் நபர் சேவலை தூக்கி நீட்ட முதல் நபர் மூதாதையர்களை மனதுக்குள் நினைத்துக்கொண்டு சேவல் கழுத்தில் ஓரே வெட்டு மண்ணில் குருதி படிந்தோடியது. வெட்டுண்டு வீழ்ந்த சேவல் ஓரடிக்கு மேல் எம்பி, எம்பி, துடி துடித்தது. சேவலின் உயிரடங்கியதும். முதல் நபர் அதை தூக்கி இரண்டாம் நபரிடம் கொடுக்கவும் அவர் சேவலை கிழக்கு பக்கமாய் தூக்கி எறிந்தார். மூன்றாம் நபர் கள்ளுப்பானையை தூக்கி கள் வடித்து நான்கு திசைகளிலும் சிதறி யடித்தார். நான்காம் நபர் ஆனச் சட்டியிலிருந்து குதிரைவளிச்சோற்றை ஒரு கவளம் அள்ளி அதை நபர்களும் நெடுசாங்க்கிடையாக ஆளுக்கொரு திசைகளில் விழுந்து வணங்கினார்கள்.

நான்கு நபர்களும் தன் முன்னோர்களை வணங்கி வேண்டிக்கொண்டப்பின் முதல்நபர்மற்றமூன்றுநபர்களுக்கும்கண்களைமூடி தியாணித்தப்படி பண்னை அரிவாளை எடுத்துக்கொடுத்தார். மூன்று பேரும் பய பக்தியாக பெற்றுக் கொண்டு மூங்கில் குத்துக்குள் புகுந்து வெட்ட துவங்கினார்கள். முதல் நபர் உயிரின்றிக்கிடக்கும் சேவலை தூக்கி இறகுகளை பறித்து அகற்றி விட்டு கல் தேடினார். சற்றுதள்ளி முருகு மரத்தடியில் ஏற்கனவே பயன் படுத்திய சிக்கி முக்கிக்கல் கிடந்தது.

மரத்தின் வேரடியில் தீ மூட்டி ஏதோ விலங்கை சூட்டான் கொடுத்த படிமம் படிந்து கிடந்தது.அதுவெருகுவின்தீய்ந்துப்போனரோமக்கற்றையாகஇருந்தது. அதை கவனித்த அவர் தன்னு டைய இனத்தார் ஏற்கனவே வேட்டைக்கு வந்துசென்றதற்க்கானஅடையாளம் என யூகித்துக் கொண்டார். ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் ஆல்,வேல், சுள்ளிக் களை சேகரித்து எறிப்பதற்க் கேற்ப குவியல்ப்படுத்திக்கொண்டு சிக்கிமுக்கி கற்களை இருஉள்ளங்கைகளி ல் வைத்து அழுத்தமாக உரசினார் தீப்பொறி உதிர்ந்து. சுள்ளிகளில் மேவியது.

சேவலின் கால்களைப்பற்றி தீக்குள் காட்டினார். சேவளின் உடல் உருகி நெய் வழிந்தது. பக்குமாய் வாட்டி சுட்டயுடன் அதை தூக்கி நுகர்ந்து பார்த்தார். கறி வெந்த சூடான மனம் இரைப்பை சென்று திரும்பியது. பக்குவமான செவல் கறியை துண்டுகளாக்கிக்கொண்டு வடக்குப்பக்கமாய் தல வாழை இலை விரித்து அதில் தண்ணிர் தெளித்து கழுவி சூட்டான் கறியை வைத்தார், பின்பு குதிரைவளிச்சோறு, ஒரு சிரட்டை நிரம்ப கள் ஊற்றி படையல் வைத்து விட்டு மூங்கில்குத்துக்குள் எட்டிப்பார்த்தார் முதல் நபர் மூன்று நபர்களும் உன்னிமார் குச்சி, சீத்தாக்குச்சி,சங்கம்குச்சி, நொச்சிக்குச்சி,அழிஞ்சா குச்சிக்க ளை வெட்டி சாய்த்து அதை ஒன்றினைத்து கட்டிக்கொண்டிருந்தனர். ‘’அப்போ குளிக்க போ வேண்டியதுதான்’’ என மனதில் நினைத்துக்கொண்டு முதல் நபர் குன்டாற் றை நோக்கி நடந்தார்.

ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிக்கொண்டிருந்தது. முதல் நபர் ஆற்றுக் குள் இறங்கினார். அப்போது..? ‘’அய்யோ அம்மா அப்பா கண்ணக் கட்டுதே மயக்கமா வருதே பசிக்கிதே யாராச்சும் காப்பாத்துங்கலேன் ஆ..ஆங்.. ஆ..ஆ.. என்று முதலில் ஆண் குரலும், அதனை தொடந்து பெண் குரலும் கேட்டது. குரல் வந்த திசை நோக்கி முதல் நபர் சென்றார். ஆற்றங்கரையின் ஆலமரயடி வாரத்தில் ஒரு இளைஞனும் யுவதியும் பசியின் கிறக்கத்தில் கிடந்தனர்.

முதல் நபர் அவர்களைஉற்றுக்கவனித்தார்ஆண்இராஜவம்சமாய் இருந்தான் பெண்தன்இனத்தில்உள்ளவள்போன்றுஇருந்தாள்.

‘’யாரு நீங்க இங்க என்ன செய்றீங்க.?’’ என்றார் முதல் நபர். அதற்கு பதில் தெரிவிக்காமல் நா வறச்சியை காட்டி ஆண் ‘’தண்ணீ, தண்ணீ...’’ என்றான் உடனே முதல் நபர் ஓடிச்சென்று ஆற்று நீரை இரு கைகளில் அள்ளினார் தண்ணீர் விரலிடுக்குளில் வழிந்துவிட்டது. உடனே மூங்கில் குத்துக்குள் குச்சி வெட் டிக்கொண்டிருக்கும் மற்ற நபர்களை சத்தமாக அழைத்தார்.

‘’ஏய்... தம்பிகளா.. இங்க யாரோ விழுந்து கெடக்காங்கப்போ... வெறசா வாங்கப் போ..’’

‘’யாராப்போ..’’என மூங்கில் குத்துக்குள் இருந்து பதில் பறந்து வந்தது.


‘’ஊராப் பூத்தைகப்போ’’என்றார் முதல் நபர் உடனே மூன்று நபர்களும் ஒடி வந்து நின்றனர். முதல் நபர் தண்ணீர் கொண்டுவர சொன்னார். இரண்டாம் நபர் தண்ணீரை கைகளில் அள்ளினார் ஒழுகியது உடனே நினைவு வந்து மூங்கில் குத்துக்குள் ஒடிச்சென்று அடிக்கனுவோடு மூங்கில் ஒரு முழ மலவுக்கு வெட்டி அதை மேலும் கீழும் பார்த்தார் அடி இல்லை உடனே நொச்சிக்கனுவை வெட்டி மூங்கில் குடுவைக்குள் போட்டார் அடியில் தட்டி அடைத்துக் கொண்டது.

அதை கொண்டு வந்து ஆற்றில் நீர் அள்ளினார். குடுவை நிரம்பி வழிய கொண்டுவந்து முதல் நபரிடம் நீட்டினார். இரண்டாம் நபர். அதை வாங்கி அந்த இருவருக்கும் தண்ணீர் வார்த்தார். இருவரும் தாகம் தணித்து விட்டு அனைவ ரையும் ஒருமுறைப்பார்த்தனர். தாகம் தீர்ந்தது தெரிந்தமையால் முதல் நபர் கேள்வி எழுப்பினார்.

‘’யாரு நீங்க எங்க இருந்து வாறீங்க..?’’

‘’என் பெயர் முருகன் இவள் என்மனைவி வள்ளி நாங்க வடக்கில் இருந்து வருகிறோம் என் தந்தை இமய மலையின் இராஜா இவள் தந்தை கொள்ளி மலையின் தலைவன் நான் இவளை மணம் முடித்துக்கொண்டதால் எங்களை நாட்டைவிட்டுத்தொறத்திவிட்டார்கள். நாங்கள் காடு மலை நாடு என பல நாட்களாய் அலைந்து திருந்தோம் இவளுக்கு தாகம் எடுக்குதே என்று ஆற்றில் நீர் பருக வந்தோம் ஆனால் பசியால் உடல் இயங்க மறுத்தமையால் இங்கு வந்து கிடக்கிறேம்.’’ இதை கேட்ட அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

முதல்நபர்அவர்கள்இருவரையும்பார்த்‘’சாமி தப்பா நெனைக்கிலனா ஒன்னு சொல்லட்டுமா சாமி’’என்றார். முருகன் கேள்வியாய்பார்த்தார்.

‘’நாங்க எங்களுக்கு பசியமத்த கஞ்சியும் கடுச்சுகிரையும் வைச்சிருக்கோம் சாமி எங்க இத சாப்பிடுவீங்களா நாங்க மலை சாதிக்காரங்க நீங்க இராஜா வம்சம்’’ என மிகவும் சாதுவாக தலைவணங்கி வேண்டினார் முதல் நபர்.

‘’பசிக்கு சாதி இல்லப்பா’’ என்றார் முருகன்.

‘’அப்ப வாங்க சாமி’’ என்றார் இரண்டாம் நபர் முருகனும் வள்ளியும் எழுந் திருக்க முயன்றனர். முடியவில்லை தடுமாறி கிழே சரிந்தனர் மூன்றாம் நபர் விழுந்தவர்களை தாங்கி பிடித்தார். பின்பு பதற்றமடைந்து படக்கென்று விடுவித்துக்கொண்டு தள்ளி நின்றப்படி ‘’சாமிதெரியாம தொட்டுப்புட்டேன் மண்ணிக்கனும்’’என்றார் அதற்கு முருகன் அனைவரையும் சுற்றிப் பார்த்துக் கொண்டு ‘’தொடுவதற்க்கே பயப்பட்டாய் என்றால் பின்பு எப்படி எங்களுக்கு உணவு கொடுப்பாய்’’ என கேட்டார்.

‘’அப்படி இல்ல சாமி நாங்க் எங்க இனத்த தவிர யாரயும் தொட கூடாது சாமி’’ என்றார் மூன்றாம் நபர்.

‘’அப்படியா இவள் உங்க இனம் தான் இவள் என் மணைவி என்றாள் நானும் உங்கள் இனம் தானே அதனால் நீங்கள் தாரளமாக எங்களை தொடலாம் இவள் உங்க வீட்டு பிள்ளை அவளை மணந்துக்கொண்ட நான் உங்களுக்கு மாமன் மைத்துனர் முறையுள்ளவன் உங்க இனத்தில் எப்படி முறையுள்ள வர்களை கொண்டாடுவீர்கலோ அதைப்போல்என்னைகொண்டாடலாம்’என்றுமுருகன் உத்தரவு கொடுத்தயுடன் உற்சாகமாய் நான்கு நபர்களும் வெட்டி போட்டிருந்த அழிஞ்சா குச்சியால் பல்லாக்கு செய்து அதன் மீது வள்ளியும் முருகனையும் அமரவைத்து மூங்கில் குத்துக்குள் தூக்கிச்சென்று அரச மரத் தடியில் பச்சை இலை பரப்பி அமர வைத்தனர்.

பின்பு நான்கு நபர்களும் கூடி பேசி அவர்கள் அணிந்திருக்கும் வேட்டிகளைக் களைந்துஇலைதலைகளைஅணிந்துகொண்டு அந்த வேட்டிகளை ஒன்றினை த்து சதுரவடிவில் மறைவிடம் கட்டி அதனுள் வள்ளியை அமர வைத்து கொண் டுவந்திருந்தகுதிரைவளிச்சொற்றைஒரு இலையில்தட்டி பரப்பிப்விட்டு அந்த  மண்பானையை தூக்கிச்சென்று ஆற்றில் நீரெடுத்து வந்து வள்ளி அருகே வைத்துக்கொண்டு‘’அம்மாதாயேஒன்னையேகுளிப்பாட்டிஅழகுபடுத்தே எங்க கிட்ட பொம்பள இல்ல அதனால கோவிச்சி கிறாமே நீயே குளிம்மா’’என்றார் முதல் நபர்.

அதை கேட்ட வள்ளி பலமாக சிரித்துக்கொண்டே ‘’பெற்றவளையும் குழந்தை யும் குளிப்பாட்ட ஆண் பெண் பேதம் இல்லை அதனால் நீங்கள் நான்கு நபர்க ளும் என்னை நீராட்டுங்கள்’’என்றாள் வள்ளி. அதன்படி வள்ளி உடைகளைந்து நிர்வாணமானாள். நான்கு நபர்களும் கண்களை மூடிக்கொண்டனர்.

‘’இப்படி கண்களை மூடிக்கொண்டால் எப்படி என்னைகுளிப்பாட்டுவீர்கள்" ‘’அது இல்ல தாயி நான் என்னா சொல்ரதுன்னு தெரியலே தாயி’’ என்றார் முதல் நபர். வள்ளி சிரித்தாள்.

‘’கோயிலில் சாமியை பூசாரி எப்படி குளிப்பாட்டுவான் அத மாதிரி என்னை யும் குளிப்பாட்டுங்க’’என்றாள் வள்ளி.

இதை கேட்டதும் அனைவருக்கும் உடல் சிலித்தது. வள்ளி தலை விரி கோல மாய் வீற்றிருக்க முதல் நபர் மேலிருந்து தண்ணீர் ஊற்றினார் பானைதண்ணீர் விழுந்துக்கொண்டே இருந்தது. வெரும் தண்ணீர் பாலாக வும்,தேனாகவும், மஞ்சலாகவும், மலராகவும், பன்னீராகவும், குங்குமாகவும், விபூதியாகவும், சந்தனமாகவும் சவ்வாதாகவும் புனுகுவாகவும், இன்னும் பிற அபிஷோகங்க ளாய் உருமாறி வள்ளியை நீராட்டியது இதை கவனித்த நபர்களுக்கு வந்திருப் பது யாரேன்று புலப்பட்டது.

வள்ளியை குளிப்பாட்டி முடித்தயுடன் இரண்டாம் நபர் காட்டுப்பூக்களால் தொடுத்த மாலையை அவள் கழுத்தில் சாத்தினார். மூன்றாம் நபர் விலங்கு விரட்ட கொண்டு வந்திருக்கும் உலேக தட்டால் சுல்லியை வைத்து தட்டி மணியடித்தார். நான்காம் நபர் அந்த ஒலிக்கேற்ப காவடியாட்டம் ஆடினார். வள்ளியின் பங்கு முடிந்தவுடன் முருகனையும் அதே போன்று குளிப்பாட்டி அழங்காரம் செய்து காவடியாட்டம் ஆடி இருவரையும் சேர்த்து அமர வைத்து தலை வாழை இலை போட்டு அதில் குதிரைவளி சோற்றையும் சேவல் சூட்டா னையும், பறிமாறினார்கள். இருவரும் ஆவலாக உண்டு கழித்தனர். உணவருந் தி முடித்தவுடன் நான்கு நபர்களையும் பார்த்து ‘’நீங்க சாப்பிடவில்லையா?’’ என்றார் முருகன்.

’’நாங்க அப்பறமா சாப்பிட்டுக்கிறுவோம்’’ என்றார் முதல் நபர்.

‘’ஏன்..?

‘’காலியாப் போச்சுல’’என்றார் இராண்டாம் நபர்.

‘’யார் சொன்னது அங்க பாருங்க’’ என்று காண்பித்தார். நான்கு இலைகளில் போதுமான உணவும் கறியும் இருந்தது. அதை அனைவரும் உண்டு முடித்துவிட்டு ‘’சாமி விடை கொடுங்க நாங்க் வந்த வேலைய பாக்க போறேம் நீங்க் போகனும்னா போங்க’’என்றார் முதல் நபர்.

‘’நாங்க போறதுக்கா இங்க வந்தோம்’’ என்றாள் வள்ளி.

‘’பின்ன எதுக்கு சாமி’’என்றார் மூன்றாம் நபர்.

‘’ஒங்கலோட தங்க போறோம்’’என்றார் முருகன்.

‘’அதெப்படி சாமி எங்கலோட நீங்க நாங்கலே ஒரு எடத்துலே தங்க முடியா மே நாடோடியா அலஞ்சுக்கிட்டு இருக்கோம் நீங்களும் எங்க கூட வந்து சீரழிய னு மா சாமி’’ என்றார் நான்காம் நபர்.

‘’கவளைப்பட வேண்டாம் இனி ஒங்களுக்கென்று ஒரு நிலையான இடம் ஒங்களுக்கு பசியார தானியம் நிரந்தரமாய் கிடைக்கும் உங்க கூட்டத்துக்கு நீங்கதான் தலைமையா இருந்து வழி நடத்த போறிங்க’’என கட்டளையிடுவ தைப்போன்று கூறினார் முருகன்.

‘’நீங்க சொல்றது வெளங்கல சாமி’’ என்றார் முதல் நபர்.

‘’வெளங்கலே, ?’’

‘’சொல்றேன் சொல்றேன்’’ என சொல்லிவிட்டு மறைந்து விட்டனர்.

நான்கு பேரும் ‘’ சாமி, சாமி, சாமி’’ என்று கத்தினார்கள். முருகனும் வள்ளியும் சிலையாக நின்றனர். நான்கு நபர்களும் திகைத்துப்போய் கையறு நிலயில் நின்றிருந்தனர். மூங்கில் குத்தை புரட்டிப்போடுமளவுக்கு பெரும் காற்று சுழன்றடித்தது. இலை தலைகள் வனமெங்கும் பரவி திரிய வானில் நீர் குன்றுகள் ஒன்றின் மேல் ஒன்றாக மோதி சிதறி நிலப்பரப்பில் நீர்குருதியை உமிழ்ந்திட நீர்வனம் ,ஊர்வனம் வனயினம் ருத்திரதாண்ட வம் ஆட நீர்குருதி சிலைகளில் படிந்து உயிர் பூக்கள் அரும்பி இரு சிலைக ளின் விழிகள் மலர்ந்து ஆண் சிலை மொளன குடம் உடைந்து உரை நீர் பொழிந்தது.


‘’ எங்களை மேலிருந்து நீராட்டுயவன் ‘’மேலூத்தான்’’ என்ற குலம் விளங்க, பூமாலை சாத்தி வணங்கியவன் ‘’சாத்துப்பாடி’’ என்ற குலம் விலங்க, காவடி எடுத்து ஆடியவன் ‘’ காவடியன்’’ என்ற குலம் விலங்க மணியாட்டி ஒலி எழுப்பியவன் ‘’ மானிப்பாடியான்’’ என்ற குலம் விலங்க நான்கு பேர் தலைமை யில் குலம் விருத்தியடைந்து நாடோடி வாழ்க்கை ஒரு இடத்தில் நிலை கொள்ளும் என்று வாக்கு தருகிறேன். என்றது ஆண்சிலை.

பெண்சிலை என்னை அண்ணையாக ஏற்றுக்கொண்டால் இருபத்தோரு பந்தி அறுபத்தோரு தெய்வமாய் அவதரித்து கால்மாடு,தலைமாடுகாப்பேன் எங்களு க்கு ஆறுகால பூஜை ஏழுக்கால பூஜை தேவையில்லை. கடுகளவு சாம்பராணி யும் ஒலக்கரிசி பொங்களும் ஒருதலுகை சூட்டானும் படைலிட்டு வாம்மா என்றால் முன்ன நிப்பேன் நீங்க் எந்த முகம் போனாலும் தங்க முகமா மாத்துவேன் இது முக்காலும் சத்தியம்’’.என்று பெண்சிலை வாக்கு கூறியது. வாக்குப்பெற்ற நான்கு நபர்களும் சிலைகளுக்கு பூஜை செய்ய துவங்கினார் கள். இருசிலைகளுக்கும் முதல் நபரான மேலுத்தான் மேலிரு ந்து நீர்வார்க்க இரண்டாம்நபர் சாத்தப்பாடி காட்டுப்பூக்களை தொடுத்து மாலையாக்கி சிலைக ளுக்கு சாத்த மூன்றாம் நபர் காவடியன் மூங்கில் குத்துக்குள் வெட்டிப் போட்டி ருந்தபல்வேறுகுச்சிகளில்காவடிக்கட்டிஆட நான்காம் நபர் மாணிப்பாடி குன்ற ற்றம் கரையில் மண் எடுத்து அதை தீயில் சுட்டு மணிசெய்து மணியடித்தான்.

அப்போது நான்கு பேர்களுக்கும் அருள் வந்து ஆடினார்கள். இவர்கலோடு மண்ணாட மரம்மாட வனமாட எட்டித்திக்கும் வீற்றிருக்கும்திடதிரவம்மாட பரப்பன ஊர்வன சேர்ந்தாட ஆட்டத்தின் உச்சமடைந்தமுடன் மூங்கில் குத்தா ள் தேர்க்கட்டி அதில் சிலைகளை வைத்து சுத்துவட்டார கிராமங்க ளுக்கு நான்கு பேரும் ஊர்வலமாய் எடுத்துச்சென்று இது எங்கள் சாமி எங்களுக்கும் சாமி உண்டு எங்களுக்கும் காணி உண்டு என கிழக்கில் உள்ள செங்கப் படைவழியாகசிவரக்கோட்டை,மேலக்கோட்டை,நடுக்கோட்டை,கீழ்க்கோட்டை  குராயூர், தூம்பக்குண்டு என்றும் மேற்காக கட்ராம்பட்டி ஆலம்பட்டி, தெற்கில் குன்னத்தூர், சுப்புலாபுரம் கல்லுப்பட்டி வடக்கில் திருமங்கலம் கப்பலுர் என்று நான்கு திசைகலிலும் சுற்றிவிட்டு மீண்டும் குன்றாற்றின் கரையில் உள்ள கட்ராம் பட்டிக்கு வந்து சேர்ந்தனர். அப்போது விவரம் பாண்டியமன்னனின் அரசபைக்கு தெரிந்து கட்ராம்பட்டியுடன் சேர்ந்து சில கிரமங்களை ஆண்டு கொண்டிருக்கும் சிற்றரசர் நரசிம்ம ராஜனுக்கு ஒற்றர்கள் மூலம் ஓலை அனுப்பி விசாரிக்க சொல்லவும் சிற்றரசரின் காவல ர்கள் நான்கு பேரையும் சிலையவும் கைபற்றி விலகிட்டு இழுத்துச் சென்றனர். அரசபை தர்பார் கூடியது ஒற்றனின் குற்றப் குறிப்பானைப்படி நான்கு பேரையும் சிற்றரசர் நரசிம்மராஜன் விசாரனையை துவங்கினார்.

‘’யாருடாநீங்க..?’’ ‘’சாமிநாங்கமேற்கஇருந்துவாரேம்ங்க’’

‘’மேற்கேன்னா..?’’

‘’மலதேசம்ங்ககல்வராயன்சேர்வரயன்கொள்ளிமலைங்க/

‘’இங்கஎதற்குவந்தீங்க?’’ ‘’பஞ்சாரம் பஞ்சாரமுடையபொல்லம் பெட்டிக்கட்ட குச்சி வெட்ட வந்தோம்ங்க’’ என்றார் சாத்த பாடி.

‘’யாரக்கேட்டுடாவெட்டுனீங்க’’

யாரகேக்கனும்சாமிஎன்றார்மாணிப்பாடி.

‘’என்ன கேக்கனும் நான்ந்தான் பாண்டிய மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட கிராம  எல்லைகளை ராஜ்ஜியம் செய்யும் இன்றேயசிற்றரசன் நாளைய பேரரசன் என்னைகேட்காமல்காற்றுக்கூடவரக்கூடாதுபுரிகிறதா’’

‘’அரசே நாங்கள் நாடோடிகள் மலைகளில் அலைந்து திரிந்து வேட்டையாடி வாழ்ந்தவர்கள் எங்களுக்கு நிலப்பகுதியின் வாழ்வுமுறை தெரியாது தவறு க்கு மண்ணித்து அருள் புரிய வேண்டும்’’என்று தலைவணங்கி கூறினார் காவடியன்.

‘’என்ன மண்ணிப்பதா அனுமதியின்றி ஊருக்குள் நுழைந்து வனத்தை அழித்து இருக்கீறிங்க யாரிடமும் கேட்காமல் பல கிராமங்களுக்குள் நுழைந்து மக்களு க்கு இடையூராய் ஆட்டம் போட்டு ஊர்வலம் சென்று இருக்கீர்கள் ஆமா இந்த சிலை யாருடையது. உங்களிடம் எப்படி வந்தது’’. அதற்கு அவர்கள் பதில் சொல்ல முழித்தனர்.

அப்போது மூன்று வீரர்கள் இடையில் புகுந்து மன்னருக்கு மரியாதை செலுத்தி விட்டு வந்த விவரத்தை கூறினார்கள். மன்னருக்கு தலைவணங்கி எங்கள் பிராதை தங்கள் முன்னனியில் சமர்ப்பிக்கிறோம் மன்னா இடையில் புகுந்து இடைமறித்தமைக்கு முதலில்எங்களை மண்ணித்தருளவேண்டும்.’’ என்றனர் நிலக்கோட்டை வீரர்கள்.

‘’ஆகட்டும்நீங்கள்வந்தவிவரத்தைகூறுங்கள்’’என்றார்மன்னர்.

‘’நாங்க நிலக்கோட்ட அரண்மனையிலிருந்து வருகிறோம் எங்கள் மன்னர் குலம் தெய்வமாய் வணங்கும் முருக பெருமான் சிலை அரண்மனை கோயிலி ருந்து காணமல் போனது எங்கள் அரசர் நான்கு திசைகளுக்கு வீரர்க ளை அனுப்பி தேட கட்டளையிட்டார் அதன் படி தேடி வருகையில் எங்கள் ஒற்றர் களின் துப்புப்படிஉங்கள் எல்லையில் திருடியசிலைகளை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுவதாகதகவல்அறிந்துவந்து இருக்கிறோம் மன்னர் தலையிட்டு எங்கள் சிலைகளை இந்த திருட்டு கும்பலிடமிருந்து மீட்டு தர தலைவணங்கி வேண்டுகிறேம்’’ என்றனர். நிலக்கோட்டை வீரர்கள்.

இதைகேட்டறிந்தஅரசர்கடும்சினத்தோடுகர்ஜித்தார்.

‘டேய்இவர்கள்சொல்வதுஉண்மையா?’’ ‘

’அய்யாதிருட்டுஎன்பதுஎங்க பரம்பரைக்கே கிடையாது இந்த சிலைகள் ஆத்தம் கரை ஒரமா மனுஷ்ச ரூபத்துலே பட்டினியா மயக்கமா கிடந்தாங்க நாங்க காப்பாத்தி பசியமத்தினோம் அப்ப சிலை வடிவம் எடுத்து எங்களுக்கு அருள் வாக்கு சொல்லுச்சி அதுக்கு அப்புரம்தாங்க ஊர், ஊரா ஊர்வலம் போனம் வேற எந்த தப்பும் செய்யல அரசே’’ என்றார் மேலுத்தான்.

‘’குறப்பாசாங்கு போடுகிறான் அரசே சிலைகளை திருடியதும் இல்லாமல் மாமிசத்தை படையலாக்கி கொடுத்து இருக்கிறார்கள் அரசே’’ என்றான் நிலக் கோட்டைவீரன்.

‘’உண்மையா?’’

‘’வாஸ்த்தவம் தாங்க எங்க கைலாண்டததான் கொடுக்க முடியும்’’ என்றார் சாத்தப்பாடி.

அரசேஅவர்களேஉண்மையைஒத்துக்கொண்டார்கள்இதற்குமேலுமாவிசார ணைதேவை’’என்றான்நிலக்கோட்டைவீரன்யார்அங்கே’’என்றதும்அந்த குரலு க்கு தண்டனைக்கான குரல் என தெரிந்து இரண்டு தண்டனை நிறைவேற்றும் வீரர்கள்முன்வந்துதலைவணங்கிநின்றனர். ‘’இவர்கள் ஊருக்கு ள் அத்து மீறி நுழைந்து வனத்தில் மரங்களையும் சிலைகளையும் திருடியதுக்கும் சாகும் வரை சவுக்கால் அடிப்பது, சிலைகளுக்குமாமிசத்தைபடைத்துசைவ,வைணவ மதத்தின் புனிதத்தை கெடுத்தமைக்கு மலம் திண்ணவைத்து தண்டனையை ஏககாலத்தில் நிறைவேற்ற வேண்டும்.’’என அரசர் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி நான்கு நபர்களையும் இழுத்துச்சென்று ஊரின் மத்தியில் உள்ள சாவடி முன் தண்டனைஅரங்கேறியது. சிலைகளை நிலக்கோட்டை வீரர்கள் அரசரிடம் பெற்றுக்கொண்டு கட்ராம்பட்டி கடந்து ஆலம்பட்டி குறுக்கே ஒடும் குன்டாற்றில் இறங்கி நீராடிவிட்டு மீண்டும் குதிரையில் ஏறி புறப்படுகையில் சிலைகளில் ஒன்றை காணவில்லை பெண் சிலை மாயமாகி விட்டது. உடனே வந்த வழியில் சென்று தேடலாம் என நினைத்து குதிரையை திருப்புகையில் ஆண் சிலை குதிரையிலிருந்துதவறிவிழுந்தது அதை எடுக்க முனைகையில் அது உருண்டு ஆற்றுக்குள் விழுந்தது.

வீரர்கள் ஆற்றில் குதித்தார்கள் ஆண்சிலை அக்கரைக்கு சென்றது வீரர்கள் ஆற்றோடு சென்றார்கள்.

பெண்சிலை நான்கு பேர் முன்னிலையில் தோன்றி அவர்கள் கட்டை அவிழ்த்துவிடுவித்துவிட்டு தண்டனை வளங்கியமன்னனுக்கும் தண்டனை யை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் வீரர்களுக்கும் வாய்கட்டு,உடல்கட்டு போட்டது பெண்சிலை.

அதிலிருந்து மீள சில நாட்கள் கழிந்தது. அதிலிருந்து அவர்கள் விடுதலை பெற நடந்தது என்ன? அதற்கு பரிகாரம் என்ன என்பதை அறிய அழகர் மலை சென்று குறவர்களிடம்குறிகேட்கமன்னனின்மதியுகமந்திரியும் மக்கள் பிரதி நிதிகளும் அழகர்மலை அடிவாரம் வந்தனர். கோடாளி கொண்டை, வாய் நிரம்பி சிவந்து வழியும் தாம்பூலம் சுவைத்தபடி பாம்படம் குழுங்க குறமகள் வேணீர் குறிசொன்னாள்.

‘’வந்தது காளி அதுக்கொரு கோயில் எழுப்பி அந்த கோயில் பூசாரியா குறவர் இனத்தில் ஒருத்தருக்கு உரிமை கொடுத்து ஆடிகடேசிலே அழகருக்கு மேல இருக்காலே தீர்த்த கர ராக்கு அவ காலடியிலே ஓடுர தீர்த்தாலே அபிஷேகம் செய்து எல்லோருமா சேர்ந்து கைஎடுத்தா கட்ட அவிழ்த்து விடுவா வனகாளி’’ என வேணீர் குறி கூறினாள் மன்னரும் மக்களும்அதை ஏற்றுக்கொள்ளும் முகமாக நான்கு நபர்களுக்கும் சிற்றரசனின் எல்கைக்கு உட்பட்ட பகுதிகள் எல்லாவற்றையும் காணியாக்கியும் கோயிலில் முதன்மைபடுத்தியும் தந்தார் சிற்றரசர் நரசிம்மராஜன். அதன்படி நான்கு நபர்களின் தலைமுறை தலைத் தோங்கியது.

21 செப்., 2014

மழைப்பாறை நாவலை முன் வைத்து,,,,,,,,

                               
                                       அண்மையில் வெளிவந்துள்ள எனது

                                    “மழைப்பாறை” நாவலை முன்வைத்து,,,,,,,

வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை உறையச் செய்துவிடும். சில திரைப்படங்கள் உங்களை நாட்கணக் கில் தூங்கவிடாது வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும். ஆனால் இவற்றிலிருந்து விடுபட எத்தனையோ அடுத்தடுத்த நிகழ் வுகள், வேறு வேறு கேளிக்கைகள், புதிய நூல் அனுபவங்கள் என்று தப்பி வெளி யேறிவிட முடியும். காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக உதறித் தள்ள முடியாத அடையாளங்களோடு பிறந்து வாழ நேர்கிற மனிதர்கள் அவற்றிலிருந்து எப்படி விடுபட?
மற்ற நூல்களைப்போல் அத்தனை இலகுவாய்க் கடந்துவிடாத பக்கங்களை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. நூலின் கட்டமைப்பு முக்கிய காரணம். அதைவிட முக்கியமான அம்சம், நான் அதிகம் அறிந்திராத இனக்குழுவைச் சார்ந்த மக்களது வாழ்க்கைதான் கதைக் களம். ‘சலவான்‘ நாவலால் அறியப்பட்டிருக்கும் பாண்டியக்கண்ணனின் இரண்டாவது நாவலான “மழைப்பாறை” பல கேள்வி களையும், விவாதங்களையும் எழுப்பிய வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.

குறவர் என்றால் பொதுவான புரிதல் நரிக்குறவர்களைப் பற்றியதாகவே இருக் கிறது. ஆனால், தமிழகத்தில் 28 வகைக் குறவர்கள் உள்ளனர் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. தங்களது வாழிடத்தையும், தங்களது வாழ்வாதாரங்களையும் பறி கொடுத்த குறவர்கள் வனப்பகுதியிலி ருந்து சமவெளிப் பகுதிக்குப் பெயர்ந்து பல்வேறு தொழில்களால் தங்களது பிழைப்பைத் தேடிக் கொண்டிருக்க, அவர்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றப் பரம்பரை அடையாளம், தீண் டாமை, சாதிய இழிவு உள்ளிட்டவற்றால் அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைக ளின் ஓர் ஆவேசத் தீற்றலாக வந்திருக்கி றது “மழைப்பாறை” என்று கொள்ள முடியும்.

நாவல் முன்னும் பின்னுமாக காலக் கணக்கைப் புரட்டிப் போட்டபடி கதையை மொழிகிறது. ஆய்வாளர் இளைஞர் சிவகுமார் இந்த நாவலில் காலம் கலைத்துப் போடப் பட்டிருக்கிறது என்று நேர்த்தி யாக வருணித்திருந்தார். கந்தன் பள்ளிக் கூடம் செல்லும் சிறுவனாகக் காலையில் கண் விழிக்கும் இடத்தில் தொடங்குகிறது கதை. இடையே கந்தன் நிகழ் காலத்தில் நடுத்தர வயதினராகப் பேசப் படுபவராகவும் இருக்கிறார். கதை கந்தனுக்கு முந்தைய தலைமுறையோடும், கந்தனோடும், கந்தனுக்குப் பல தலைமுறைக்கு முந்தைய வாழ்க்கை யின் சாட்சியமான நாட்டார் தெய்வத்தோடும் ஒரு சேர நடை நடந்து காட்டுகிறது. இன வரைவியலின் உட்கூறுகள் போலும், ஓர் இனக்குழுவின் பண்பாட்டுச் சுவடு களாலும் எழுப்பப்படும் இந்தக் கதை, வரலாற்றில் பதிவாகாமலே போய்விட்ட தீனக் கதறல்கள், ஆதிக்கத்தின் வன்ம சேட்டைகள் உள்ளிட்டவற்றை மௌனமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரி லிருந்தும், அணையாத நெருப்புக் கங்கு களிலிருந்தும் தேடி எடுத்து முன்வைக் கிறது.

கதை என்று தொடர்ச்சியாக எதையும் தொடங்கி வைத்து, வளரக் காட்டி, முடித்து வைக்கும் வகைப்பட்ட நாவல் இல்லை “மழைப்பாறை. ” ‘எங்களது வாழ்க்கை இன்னது’ என்று கைப்பற்றி இழுத்து இதயத் துடிப்பை நேரடியாக உணரவைப்பது போல் சொல்லும் வகையிலானது.

படிக்கும் ஆர்வமும், துடிப்பும், திறமையுமுள்ள கந்தனை அவனது வறிய குடும்பச் சூழலும், கீழ்மைப்படுத்தப் பட்டிருக்கும் சமூகப் பின்புலமும் அங்கீகரமற்றவனாக நிறுத்துவதோடு, மிக இயல்பான ஒன்றாக அவன் மோச மாக நடத்தப்படுவதில் வெளிப்படுகிறது. தேர்வு எழுதப் போகும் அவன், விடை த் தாள் வாங்கக் காசில்லாமல், கழிப்பறை சுத்தம் செய்யும்வேலையிலி ருக்கும் தாயை நாடி ஓடுவதையும், சுத்தம் செய்த கைகளாலேயே காசையும், சோறையும் பெற்றுக் கொள்ளவேண்டிய அவளது அவலத்தையும் நாவல் முன்னிறுத் துகிறது. இத்தனைப் பாடுகளுக்குப் பிறகு பள்ளிக்குள் நுழையும் அவனிடம் தேர்வு எழுதும் தகுதியை எதிர்பாராத ஆசிரியர் உலகம் பள்ளியில் அவனையே கழிப் பறை சுத்தம் செய்ய வைப்பதை மிக தன் னியல்பாக நிகழ்த்துகிறது.

ஒரு சூழ்நிலையில் ஊரைவிட்டு வெளியேறி திருட்டு ரயிலேறிச் செல்லும் போதும், டிக்கெட் பரிசோதகருக்குத் தப்பி ஓடி ஒளிய கந்தனுக்குக் கழிப்பறை தான் கிடைக்கிறது. இடையே எங்கோ இறங்கி வயிற்றுப்பசிக்குச் சோறு கேட்கும் இடத்தில், யாரோ செய்த களவுக்கு இவனைப் பிடித்துப் போகும் காவல்துறை இவன் சாதிப் பெயரைக் கேட்டதுமே முடிவுக்கு வந்துவிடுகிறது இவன்தான் திருடன் என்று.இயற்கையின் இயல்பான மலர்தலாக நிகழும் பூப்பெய்தும் பருவம், குறவர் இனப் பெண்களின் வாழ்வில் தீயின் தீண்டுதலாக நிகழ்தலின் காலத்தை நாவல் வெவ்வேறு பெண்களின் கதை வழியாக ஆதிக்க சாதி வாலிபர்களின் காம வெறியை அவர்கள் எதிர்கொண் டதை பதைபதைக்கப் பேசுகிறது. ஊருக்குப் புறத்தே குடிலில் இராப் பொழுதில் சடங்கு சம்பிரதாயமாகத் தங்கவைக்கப் படுகையில் வல்லுறவுக்கு ஆட்படும் பெண், சீமெண்ணெய் விளக்கு தவறி விழுந்து குடிசை பற்றி எரிந்த விபத்தில் சிக்கியதாக அடுத்த நாள் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மரித்துப் போகும் கடந்த காலத்தின் கதையை, நிகழ்காலத் திலும் மருத்துவமனையில் பார்க்கிறார் கந்தன்.
கந்தன் தனது உயிராகக் கருதியிருந்த அக்கா லட்சுமியின் திருமணம், நூறு கிலோ இறைச்சி கொண்ட ஆண் பன்றியை (சலவான்) ஆயுதமின்றி விரட் டிப் பிடித்துக் கொன்று தூக்கி வந்து முறைப்படி தகுதி நிரூபிக்கும் முத்துப் பாண்டியுடன் நிகழ்கிறது. அந்தப் போராட்டம் அத்தனை நேரடி விவரிப்பாக அமைகிறது. சடங்குகள், சம்பிரதாயங் கள் குறித்த விவரிப்புகள் ஒரு புறம் முழுமையாக இடம் பெறும் நாவலில், அவற்றிலிருந்து மாறுபட்டு நடக்க முயற்சி மேற்கொள்ளும் கந்தனையும் காட்டுகிறது. குறிப்பாக தமது மகள் பூப்பெய்தும் பொழுதில் பாரம்பரிய சடங்குகளைச் செய்யாது பார்த்துக் கொள்கிறார் அவர்.

கந்தன் குடும்பத்தோடு குலதெய்வ பூஜைக்குப் புறப்படும் பயணத்தினூடே அவரது இளமைக் காலக் காதலும், சாகசமும், அதன் சோக முடிவும் சாதிய பொருளடக்கத்தோடு வந்து போகிறது. ஆனாலும் தமக்கு மேல் கட்டுமானத்தில் இருக்கும் சாதிப் பெண்ணோடு ஒரு சூழலின் நிமித்தம் நடைபெறும் திரு மணத்தின் பதற்றக் காட்சிகளும் பின் னோக்கி அழைத்துச் சென்று சொல்லப்படுகின்றன.

சாதி கடந்து நீதியோடு நடந்து கொள்ளும் மனிதர்களும், அப்படியான நேரங்களும் - காவல் நிலையத்திலும் கூட, நாவலில் இடம் பெறவே செய்கின் றன. ஆனால் சாதியின் முடிச்சு எத்தனை இறுக்கமானது என்பது கந்தனை அவன் திறமை பாராட்டப்பட்டபோதும் ஊர் நாடகக் குழுவில் நடிக்க விடாது சாதுரி யமாக கழித்துக்கட்டும் விதத்தில் உரத்துச் சொல்லப்படுகிறது.
சந்தனம் - கூடம்மாள் தம்பதியினரே கந்தன் குடும்பத்தின் பல தலைமுறைக்கு முந்தைய சாதியக் கொடுமையால் பழி வாங்கப்பட்ட அடையாளம்.

ஆடையுருவி அவமானத்துக்கு உள்ளாக்கப்படும் கூடம்மாளின் வெஞ்சினம் கண்ணகி கதைபோலவே ஊரைத் தண்டிக்கிறது. வல்லுறவுக்கு அலைந்த ஆதிக்க சாதியினரை அவர்களது காமத்தின் எதிர்முனையிலிருந்து விரட்டி விரட்டித் திண்டாட வைத்துத் திணறடிக்கிறது. ஓய்ந்துபோய் மண்டியிட்டுப் புலம்பி மன்றாடி மன்னிப்பு கேட்கும் ஜமீன் சார்ந்த மக்களைக் கொண்டே தனக்கு சிலை வடிக்க வைத்து மறைந்து போகிறாள் கூடம்மாள்.

அந்தக் கோயிலில் வந்து நின்று கந்தன் குடும்பம் கும்பிடுமிடத்தில் நாவல் முற்றுப் பெறுகிறது. கூடம்மாளை தண்டித்துத் தீர்ப்புச் சொல்லும் பாலியல் வக்கிரமான ஜமீன் பாத்திரமும் கூட, அவளது சினத்தால் அலைந்தழியும் ஊராரின் வெறிக்குத் தப்ப முடியாத இடத்தைப் பேசுகையில் அவர் அலியாக மாறினார் என்ற விவரிப்பு கேள்விக்குள்ளாகிறது. சொந்த வாழ்வனுபவத்தை முடிந்தவரை பதிவு செய்யும் வேட்கை ஆசிரியருக்கு இருந்திருக்கலாமோ என்று சில இடங்களில் தோன்றியது. காலத்தைக் கலைத்துப் போட்டு எழுதப்படும் ஒரு நாவலை மிக எளிதாக நகர்த்தி வாசிக்க முடியாதது போலவே, அது ஏற்படுத்தும் மன அதிர்வு களைக் கடப்பதும் எளிதானதன்று. அடுத்த நாவலுக்கான முயற்சியில் இறங்கும் நம்பிக்கை பாண்டியக் கண்ணனுக்கு அதுவே ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் வரவேற்புக்குரியது.
************
எஸ். வி வேணுகோபால்
நன்றி: இலக்கிய சோலை: தீக்கதிர் (செப் 21, 2014)

16 செப்., 2014

விழுதாயும்,விருதாயும்,,,,,,/

 

                     திரு விமலன் அவர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட விருது

10 செப்., 2014

கல்குறி நாவல்,,,,,(பாகம் 1)



         
 வெயில்சர்ப்பம் தீண்டலாள் வேப்பப்மர இலைகள் மஞ்சல் பாரித்து உதிர்ந்துக்கொண்டிருக்க.அடர்த்தியானநிழல்தேடி இடம்மாறி,மாறி அமர்ந்தனர். பாண்டியின் வகையறா/.
‘’யேன் வாத்தையே மதிச்சி வேணாத வெயிலே எல்லாரும் வந்துருக்கீங்க ஒங்கலே நெனச்சா சந்தோஷமா இருக்கு. ஆனா யென் மவனே நெனச்சாத்தான் மனசு கெடந்து அறுக்குது என்றார் பாண்டி.
கோடாலிக்கொண்டை காதில் சிகப்பு கல் பதித்து கடுக்கான் அணிந் திருக்கும் முதியவர் கழுத்தாடி யவாறு ‘’அறுக்காமே என்ன செய்யும் இதெல்லாம் நம்மே கொலம் கோத்துரத்துக்கு அடுக்குமா? கறியே திண்ணா எலும்பே கழுத்துலையா போட்டுகிட்டு வருவாங்க கலி முத்திப்போச்சிப்போ’’ என்றார் முதியவர்.

அந்த வார்த்தையில் பாண்டிக்கு நா வறண்டுப்போனது. வேம்படியில் குத்தவைதிருந்த பாண்டியின் சின்னாத்தா முறை உள்ளவள் சருகை மென்று வலது கன்னத்தில் ஒதுக்கிக்கொண்டு கடவாயில் சிவந்த வானிர் வழிய ‘’அய்யா பாண்டி சொல்றேன்னு கோவீக்கபுடாது வனத்துலே மேஞ்சாலும் எனத்துக்கு வந்து சேரனும் ஏறியடிச்சி எறவாரம்தாண்டுனாதாங்குறதுக்குதாவாரம்கூடமிஞ்சாது’’என்றாள்  சின்னாத்தா.

எல்லாவற்றையும்கேட்டறிந்தபாண்டிஅண்ணன்மாரியப்பனைப்பார்த் து ‘’ஏண்ணேநீஎன்னணேசொல்ரே’’எனக்கேட்டார்பாண்டி.

‘’நா என்னத்தேப்பா சொல்றது ஓம் பாடு ஓம் மவேன் பாடு நாளப்பின்னே நல்லது கெட்டதுன்னா செமக்க போறது நீயிம் ஓம் பொம்பளையும் ஊடாலே நான்எதுக்கு’’ என்றுபிடி கொடுக்காமல் பேசினார்மாரியப்பன்.

‘’ஏம்ப்பாஆம்பள துண்டு திரிச்சு பேசுரதுக்கு அவன் என்ன காட்டான் கறையானா? அவன் ஓம் தொம்பி பிள்ளே கெடையாது’’ என்றாள் பாண்டியின் அண்ணன் மணைவி காமாட்சி அந்த வார்த் தையில் ஈரம் இருப்பதை உணர்ந்தார்கள்.

பாண்டியும் மணைவி மாரியும். காமட்சி தொடர்ந்து பேசினாள். ’’இந்தா மச்சான் நல்லதோ கெட்டதோ நம்ம பயே ஆசப்பட்டுட்டான் அந்த புள்ளையும் அவனே நம்பி வந்துருச்சி இஷ்ட்டபட்ட ரெண்டு பேத்தயும் சேத்து வைக்கிறதுதான் மொற அதெ விட்டுபுட்டு இல்லாதே நொணனட்டியம் பேசி புள்ளைகலே எழந்துட்டு வெண்ண னைலே நிக்ககூடாது’’ என்று பாண்டியின் தலையில் பக்குவமாய் பாறாங்கல்லை போட்டாள் காமாட்சி.

இதில் சுதாரிப்பான பாண்டி உடல் சிலிர்க்க தண்ணுனர்ச்சியடைந் தார்.ஆனாலும்அதற்குஅடைப்பு போட அண்ணக்கொடி என்ற பாண்டி யின் தங்கச்சி மகன் இடைபுகுந்து பேசினார். ‘’மாமா பொம்பளே நாட்டாமே பொழப்புக்கு ஆகாது ஓங்க மகேன் நம்ம புள்ளை கூட்டிக் கிட்டு வந்திருந்தா கட்டிவைச்சிட்டுவாரவனேவாடாதவிடிக்கேன்னு பாத்துக்கிறலாம் அவேன் ஊறா பூத்தையலே எப்பிட்டு வருஷிறிக் கான் அதுவும் கோந்திய பூத்தைய வெளங்குமா?

‘’அய்யா மருமனே கோந்திச்சின்னா என்ன? மாக்கச்சின்னா என்ன? அவீங்க தூக்குற அரிவாலும் வெட்டும் நம்மே தூக்குறே அரிவாலும் வெட்டும்.அதுக்கு ஒசந்தவேன் தாழ்ந்தவேன்னு தெரியாது’’ என்றார் பாண்டியின் மாமா.

‘’முடிவாஎன்னதான்சொல்லுறிங்க’’என்றார்பாண்டி.

‘’ஏணே ஊரு ஒலகமெல்லாம் பஞ்சாயாத்து தீக்குறே ஒனக்கு நாங்க யேசனே சொல்லனுமா? மறுமகே வைச்சி பொழைக்க போறது மதினி அதுட்டத்தான் நீ கேக்கனும்’’என்றாள்பாண்டியின் தங்கச்சி பாப்பா த்தி.

‘’இது வாஸ்த்தவமான பேச்சு என்ன மய்னி எங்க அக்கா சொன்னது காதுலே விழுந்துச்சா? என்றார் தங்கராசு. தரையில் குச்சியால் குத்தி க்கொண்டிருந்த பாண்டியின் மணைவியும், குமாரின் அம்மாகிய மாரி திடுக்கிட்டு கூட்டத்தை சுற்றி பார்த்துவிட்டு தனது கணவனின் முகமறிந்து ‘’அந்தாளு என்னே சொல்லுதோ அதான் என் முடிவும்’’ என உறவுகள் எறிந்த கல்லை கணவன் பக்கமாய் உருட்டிவிட்டாள் மாரி.

அனைவரின் வாய்பார்த்த குமாருக்குவார்த்தைகள் வகைப்படவில் லை ஆனால் சுனிதாவின் குரல் மட்டும் துள்ளியமாய் ஒலித்துக் கொண்டே இருந்தது.

‘’யாரு என்ன சொன்னாலும் நாமே மெட்ராசுக்கு போயிறனும் இல்லாட்டி நம்மலே பிரிச்சுருவாங்க அப்படி நடந்துச்சுன்னா நான் திரும்ப வீட்டுக்கு போக முடியாது அப்படியே போகனுமுன்னு நெலமே ஆச்சுன்னா பொணமாத்தான் போவேன் என்ன முடிவெ டுத்து நாமே புறப்பட்டமோ அதே செய்றதுக்கு வழியபாருங்க’’ என்று சுனிதா சொன்ன வார்த்தை கற்றையின் கூர்மை இதயத்தை குத்தி குடைந்தது அதனால் அந்த இடத்தில் ஒரு நொடிகூட நிற்க முடியாமல் பெரியப்பா வீட்டில் தங்க வைத்திருக்கும் சுனிதாவை காண்பதற்க்கு ஓடினான் குமார்.

‘’என்னப்பா நம்மே பேசிக்கிட்டு இருக்கோம் யாருக்கு வந்த விருந்தா ஓடுறான்’’என்றார்மாரியப்பன்.

‘’நீஒரு கூறுக்கெட்ட ஆளுயா அந்த புள்ளையே தனியா விட்டுட்டு இவனே மட்டும் கூட்டிக்கிட்டு வந்தா நிப்பானா’’என்றாள் மாரியப்ப னின் மணைவி காமாட்சி.

‘’அதான் ஒம் மகே முருகாத்தாவே தொனைக்கி நிப்பாட்டிட்டு த் தானே வந்தோம்’’ என மணைவிக்கு விளக்கம் சொல்லிவிட்டு பாண்டியை பார்த்து ‘’சரிப்பா தம்பி ஆசப்பட்டு கூட்டிகிட்டு வந்துட் டான் நீயும் ஒம் மகேன் போக்குக்கே விட்டுபுடிச்சு கூட்டுக் கிட்டு வந்துட்டே எல்லாருமா சேந்து பேசி முடிச்சுரலாம் ஆனா நம்மலோட அந்த புள்ள ஒன்னா மன்னா பொழங்குமா?’’ ‘’எல்லாம் தெரிஞ்சுதானே வந்துருக்கும் அந்த புள்ள’’என காமாட்சி வக்காளத்து வாங்கினாள் காமாட்சி. எல்லாவற்றையும் கவனமாக கேட்ட பாண்டிக்கு யேசனை தட்டியது. ’’சரி நான் சொல்றத எல்லாரும் கேளுங்க நம்ம பாட்டேன் முப்பாட்டேன் காலத்துலே இருந்து மனுஷனுக்கு மனுசன் முடிவேடுக்க முடியாததே குறிகேட்டு தெரிஞ்சுகிறுவோம் அதேஆண்டி மொத அரசன் வர சொல்லி அதுபடியே நடக்க வப்போம் அது மாதிரி ஊருக்கு சொன்னகுறியே நமக்கும் பயன்படுத்தினா என்னே? இதுக்கு நீங்கத்தான் மொகந்தரம் சொல்லனும்’’என்றார்பாண்டி.

‘’ கொலசாமியே நெணச்சிக்கிட்டு குறியே வைப்பா வள்ளுவன் வாக்கு தவர்னாலும் குறவன் குறி தப்பாகாதுப்போ’’என சிகப்புக்கல் கடுக்கான் அணிந்த பெரியவர் சொன்னார். அதற்கு அனைவரும் ஆமோதித்தனர். அதன்படி பாண்டி குறிக்கான ஏற்பாடின்படி அனைவரும் ஒவ்வெரு கல் பொறிக்கிவந்து தருமாறு வேண்டினார். அவரர் அமர்ந்த இடத்திலிருந்து சின்ன சின்ன கற்களை பொறிக்கி வந்து கொடுத்தனர். அவைகளை எண்ணி பார்க்காமல் இரு உள்ளங் கைகளிலும் வைத்து ஒரு கைகளிலிருந்து மற்றோரு கைகளில் மாற்றி போட்டுக்கொண்டே இருகைகளையும் விரித்துக் கொண்டு அனைவரையும் சுற்றியடித்துப்பார்த்தார்.கூட்ட மத்தியில் ஏழு வயது பெண் பிள்ளை தாயாரின் தலை முடியை வலது கையால் பற்றிக்கொண்டு இடதுகை பெருவிரலை சப்பியபடி நின்றிருந்தாள். அந்த பிள்ளையை பாண்டி பார்த்தார் அந்த பார்வையறிந்து அருகே வந்து இரு கைகளில் உள்ள கற்களை உற்றுக் கவனித்துவிட்டு வலது கையில் உள்ள கற்களில் ஒன்றும், இடது கைகளில் உள்ள கற்களில் ஒன்றுமாய் எடுத்து பாண்டியின் காலடியில் வைத்துவிட்டு அம்மாவிடம் சென்று மறுபடி விட்டதை துவங்கினாள்.

அமர்ந்திருந்த கூட்டம் எழுந்து நின்று கற்களை பார்த்தார்கள். ஒருகல் கூலாங்கல், மற்றோரு கல் சுண்ணாம்புக்கல். பாண்டியும் எழுந்து நின்று கண்களை மூடி குலத்தெய்வத்தை வேண்டினார். கிழக்கில் கெளளி உச்சுக்கொட்டியது. பாண்டி கைகூப்பி வணங்கிய படி முனுமுனுத்தார். உடல் சிலிர்த்தது. வடக்கிலிருந்து வந்தது ஒரு ஈ தெற்கிலிருந்து வந்தது மற்றோரு ஈ. இரண்டும் இருகற்களையும் வட்டமடித்தது. ஈ சுழல, இருக்கும் வேம்படிகள் அசைய சிறுகாற்று பெரும் காற்றாய் சுழன்றடிக்க வெப்ப மண்டலம் குளிர்ந்து மேற்கு வானில் வெள்ளி நிறக்கீறல் உருவாகி கரும்பாறை உடைந்து உருகியது. வெடித்து கிழிந்திருந்த மண் ரேகை அழிந்து மண்ணுக் கேற்ற நிறத்தில் உயிர் நீர் உருண்டோடியது. மழையின் தாக்கம் யாரையும் அப்புறப்படுத்தவில்லை அவரவர் கட்டுண்டவர் களாய் நின்றிருக்க மழைபாம்பின் சீற்றத்துக்கு ஈக்கள் பயமற்று சுழன்றப்படி ரீங்காரம்விட்டது மழை மிருகத்தின் உருமலையும் மிஞ்சியது. வானில் வட்டமிடும் வல்லூறுகளில் இருந்து புற்றிசல்வரை மழையின் தாக்குதலுக்கு சிறகுகள் இழந்து சிதைவதற்கு அஞ்சி மறைவிடம் தேடி பதுங்கிக்கொள்ளும். ஆனால் கற்களில் அமர வட்டமிடும் ஈக்கள் மழைக்கு அஞ்சாமல் தன்னை நம்பி காத்திரு க்கும் மக்களின் உண்மையான வேண்டுதலு க்காக சிறிய சிறகுகள் மழைதுளிகளைசிதரியடித்தபடிகற்களில்அமரஎத்தனித்துஇறங்கியது.

பாண்டி மனதுக்குள் வேண்டியது கூலாங்கற்களில் ஈ உட்கார்ந்தால் பெண் நமக்கு சுண்ணாம்பு கற்களில் அமர்ந்தால் அவள் பெற்றோர் வசம் ஒப்படைப்பது. மழைஅடர்த்தியில் எதிரே உள்ளது எதுவும் தெரியவில்லை ஆனால் கற்கள் மட்டும் தெளிவாக தென்ப்பட்டது. காற்றின் வேகம் முன்பை விட உக்கிரமானது அதற்கு ஈடுக்கொடுக் கும் வகையில் மழையும் போட்டியிட்டது.

இவைகளுக்கு முன் மக்களின் உறுதியான நம்பிக்கை கல்லின் மீது படிந்திருந்தது. வடக்கிலிருந்து வந்த ஈ சுண்ணாம்பு கல்லை சுற்றி யது. தெற்கிலிருந்து வந்த ஈ இலக்கின்றி வெறுமனே இருகற்களுக் கும் இடையில் இறங்குவதும், பின்பு மேல் நோக்கி பறப்பதுமாய் வித்தைகாட்டிக் கொண்டிருந்தது. காத்திருந்த மக்களில் ஒரு மூதாட்டி குளிரின் தாக்குதலால் நடுங்கிக்கொண்டே பாண்டியை பார்த்து.
‘’ஏப்பா பாண்டி நீ என்னா நெனச்சிருக்கியோ எனக்கு தெரியாது ஆனா குறி தப்பா சொல்லாது பேசாமே புள்ளைய பொருள் காரங் கிட்டே ஒப்படைக்கிறது நல்லதா படுது’’ என குளிரில் நடுங்கிக் கொண்டே கூறினாள். அந்த வார்த்தை மழை இரச்சலையும் மீறி அனைவரையும் சென்றடைந்தது.

கிழவியின் வார்த்தை உண்மையாகி போவதற்க்கான சூழல் ஏற்ப்படத்தான் செய்தது. கொட்டிய மழை நீரில் குறிக்கற்கள் மூழ்கிக் கொண்டிருந்தது. ஈக்கள் மலைக் குன்றுகளில் இறங்குவ தைப் போல் இறங்குவதும் இறங்க முடியாமலும் தத்தளித்தது.

ஆனால் பாண்டிக்கு நம்பிக்கை இருந்தது. நின்றிருந்தவர்களின் கெண்டை கால்களை நீர் தழுவி ஓடிக்கொண்டிருந்தது. வேப்ப மரமு ம், புங்கைமரமும், கொண்றைமரமும், கிலைகள் ஒடிய ஆடியது குறிக்கல் எடுத்துவைத்த சிறு குழந்தை தாயாரின் முந்தானைக்குள் புதைந்து நின்றது. நீரில் குறிகற்கள் தனது அங்கத்தின் கடைசி நுனையும் தண்ணீர்க்குள் மூழ்கிக்கொண்டுயிருந்தது. வடக்கு ஈ தன் எண்ணத்தை உறுதிபடுத்திக்கொண்டு சல்லேன்று கூலாங் கல்லில் தனது மெல்லிய கால்களை பரப்பி நின்றது.

பாண்டி நெடுசாங்கிடையாக கல்லுக்கு முன் விழுந்து வணங்கினார். சனம் ஆனந்த கூத்தாடியது.