9 செப்., 2015
22 மே, 2015
மேடை,,,,,,,,( பாகம் 2)
பஸ்சாத்தூரின்நகரத்தைகடந்துவைப்பாற்றின்பாலத்தில்ஊர்ந்துகொண்டிருந்தது.
சாளரம் வழியாக பாலு பார்த்தான் வைப்பாறு இயற்கையின் இரண்டாம் தாரத் தின் பிள்ளையைப் போல் சவளைத்தட்டி மெலிந்துப்போய் ஓரமாய் ஒழுகிச் சென்றுக்கொண்டிருந்தது.
சாளரம் வழியாக பாலு பார்த்தான் வைப்பாறு இயற்கையின் இரண்டாம் தாரத் தின் பிள்ளையைப் போல் சவளைத்தட்டி மெலிந்துப்போய் ஓரமாய் ஒழுகிச் சென்றுக்கொண்டிருந்தது.
கோடைக்காலத்தைசமன்செய்திடஆற்றுக்குள்தோண்டியிருந்தஇரண்டுகிணறு கள் வானம்ப்பார்த்து காத்திருப்பது அந்தநடுஇரவிலும்நன்றாகத் தென்பட்டது.
வைப்பாற்றுப் பாலத்தின் சிமெண்டு சாலையிலிருந்து பேருந்து கருத்த தார்ச் சாலையிலிறங்கி வேகமெடுத்தது, பின் சக்கர மேல் தட்டில் அமர்ந்தி ருக்கும் பாலுவுக்கு உணர்த்தியது. பேருந்தின் உருளிப் பட்டை முன்னோ க்கி உருள, அவனின் மனச்சக்கரம் பின் நோக்கி உருளாரம்பித்தது.
‘’டேய் பாலா அடேய் ஒன்னத்தாண்டா’’ தட்,தட்டென பாலுவின் பெரியப்பா தகர கதவைத் தட்டினார். அவனிடமிருந்து எவ்வித பதிலுமில்லை.
‘’ஓய் கூப்புடுறது காதுல விழல மாப்புளே ஜோக்கு பேதும்டா பொழப்பப் பாரு’’என மீண்டும் கத்தினார். மனைவியோடு படுத்திருந்தவன் பேய் கண்டு அரண்டவன்ப் போல் பட, படவென எழுந்து அவிழுந்திருந்த லுங்கியை சரி செய்துக் கொண்டே அவரசரமாய் கதவைத் திறந்தான்.
‘’என்னப்பா இன்னும் விடிலையா? என்றார் அவன் பதில் தேடுவதற்குள், அவர் துவங்கி விட்டார்.
‘’வேல வெட்டிக்கி போனும் நெனப்புயில்லையா?’’ பொண்டாட்டி சொகமெல் லாம் பொழப்புலயிருக்கு முந்தனைக்குள்ள மொடங்கிக் கிடந்தா கஞ்சிக்கி கையேந்தனும், கல்யாணம் முடிச்சி பத்துனாளாச்சி ஒங்கப்பேன் மயிரு போச் சின்னு ஒப்படச்சிட்டுப் போய்ட்டான், ஒன்ன நம்பி பின்னால வந்த புள்ளயே காப்பாத்த வேணாமா?’’என அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் பாயிலிருந்து படக்கென்று எழுந்து அடுப்படிக்குள் சென்று நின்று கொண்டாள். அவரின் அறிவுரை திருடர்களை கண்டிப்பதைப்போல் உணர்ந்தாள்.
‘’சரி நா முன்னேப் போறேன் வெரசா வரப்பாரு’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். பாலு வீட்டுக்குள் வந்து மனைவியைத் தேடினான். அவள் களைந்தி ருந்த சேலையை சரி செய்துக் கொண்டிருந்தாள். இவன் இரும்பு வாளியி லுள்ள தண்ணீரை தகர போனியில் கோரி முகம் அலம்பி கொப்பளித்து லுங்கி அடிமுனையில் முகம் துடைத்துவிட்டு, மண் சுவற்றின் மதில் மேலிருந்த கையளவுள்ள கண்ணாடியில் அவசரமாய் தலைக் கோதி, முகம் பார்த்தான். வலது கண்ணத்தில் கடிவாய் சிவந்தி ருந்தது. தடவி பார்த்து விட்டு தன் ஆண் மையின்அராஜகத்தின் அவலத்தை எண்ணி வருத்தமாய் அவளைப் பார்த்தான். அவள்அர்த்த சாமத்தின் அடையாளங்களை களைந்த ஆடையில் கரைத்துக் கொண்டிருந்தாள். அதனால் அவளிடம்எதிர்வினையில் லை.
‘’போயிட்டு வாறேன்’’ என்றான். அவள் அதற்கு பதிலேதும் சொல்லவில் லைஅவனும்அதற்க்காககாத்திருக்கவில்லை.ஏனெனில்அவள்நினைத்தது ஒன்று இப்போது நடந்துக்கொண்டிருப்பது வேறு.
பெரியப்பா பெயர் பதிவு செய்திடும் நகராட்சி அலுவலகத்திற்குள், ஓட்டமும், நடையுமாக வந்துச் சேர்ந்தார்.
அங்கே ஆணும், பெண்களுமாய் குழுமிருந்தனர். சிலர் அப்போதுதான் ஓடோ டியும்,வேகமானநடையுமாக வந்துக்கொண்டிருந்தனர். சுகாதார ஆய்வா ளர் அலுவலகத்தில்மரநாற்காலியில்அமர்ந்தப்படிசாளரம்வழியாக கவனித்துக் கொண்டிருந்தார்.
மேஸ்திரிபெயர் பதிவேட்டை மடியில் வைத்தப்படி அலுவலக வாசளில் அமர்ந்து வந்தவர்களையும் வந்துக்கொண்டியிருப்போரையும், நேட்டம் விட்டவாறு, அலுவலக சுவரில் பொருத்திருந்த அஜான்டா வட்டவடிவ கடிக்காரத்தில் நொடிகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தார். பெரிய முள், நான்கு ஐம்பத்தெட்டிலும், சின்ன முள், நான்கிலும், நின்று நொடிகளை கரைத்தப்படி இருந்தது. ஐந்தாக இரண்டு நிமிடங்கள் இருக்கவே அலுவலக மணியை அடிக்க உத்தரவுப் பிறப்பித்தார் மேஸ்திரி.
‘’டேய்முனியாஅடிடா’’என்றார்.இதற்க்காகவேகாத்திருந்த முனியன் இருப்புப் பாதையின் தண்டவாளத்தின் அரையடி அளவிலுள்ள இரும்பு துண்டை உருளை வடிவிளான தடியால் உடல் அதிர அடித்தான். அதுதான் துப்பரவு பணியாளர்களுக்கான மனித கழிவுகளை மனிதனை அகற்ற வேண்டிய அவள மணி. அடித்தான் டங்..டங்.. டங்.. .. டய்ங்.. டய்ங்.. அந்த பெல் அடிப்பதில் அவனுக்கொரு மகிழ்ச்சி அவனடிக்கும் பெல்லில்தான் மொத்த பணிகளும் நடைபெறுகிறது. ஒவ்வொரு துப்பரவு பணியாளர்க ளின் தினசரி பணி அவன் கைகளில்தான் இருப்பதாக உணர்ந்தான். ஓடிவந்த இரண்டு ஆண்க,ஒரு பெண் வரிசையை விட்டு தனியாக நின்றனர். மேஸ்திரி பெயர்களை வாசித்தார்.
‘’முத்தம்மா’’
‘’இருக்கேன் எசமா’’
‘’மாரியப்பா’’
‘’வந்தேன் சாமி’’
‘’முனியா’’
‘’வந்தேன் எசமான்’’
மேஸ்திரி பெயர் வாசிக்க, வாசிக்க தொழிலாளிகள் தலை கவிழ்ந்தப்படி முன் சென்று ஆய்வாளரை வணங்கியப்படி திரும்பாமல் பின்னாடி சென் றனர்.அவர்,அவர்களைஒருமுறைபார்த்துவிட்டுபதிவேட்டில் டிக் செய்தார்.
பெயரடுப்பு முடிந்து தொழிலாளிகள் எதிர்ரெதிரே வரிசையாக நின்றனர். மேஸ்திரி அனைவரையும் ஆராய்ந்து விட்டு இடையில் நின்றிருந்த முத்தனை கவனித்துவிட்டார்.
‘’ஏலேய் முத்தா’’
‘’எசமான்’’என்று நாடியில் கைவைத்து குனிந்து நின்றான்.
‘’தள்ளிப்போடா’’என்றார் மேஸ்திரி அவனுக்கு என்னவென்று புரியாமல் வரிசையிலிருந்து விழகி நின்றான். அவனுக்கு விளங்கும் விதமாகவும், ஆய்வாளார் காதில் பதியுமளவுக்கும் கத்தினார்.
‘’பெரிய மொளாலி நெனப்பு மைரோ வேட்டிக் கட்டிட்டு வந்திருக்க’’ என அரட்டினார் மேஸ்திரி. அப்போதுதான் காக்கி டிராயர் அணியாமலிருப்ப தை உணர்ந்தான்.
‘’எசமான் நேத்து ராத்திரி செக்கானத்துக்கு தேவைக்கு போன கையோடு மறதியா வந்துட்டேன் மண்ணிக்கனும் எசமா சமூகம் மண்ணிக்கனும்.’’
‘’பொஞ்சாதிய மறப்பியாடா போ, போ ரெண்டு நாளைக்கு நிப்பாட்டிருக்கு’’ என முகத்தை கடுமையாக்கிக் கொண்டு சொன்னார். அவன் அதற்க்கு மேல் நிற்க வில்லை, மேலும் நின்றால் இரண்டு நாள் ஐந்து நாட்களை தாண்டிவிடும்.
தொழிலாளிகள்எச்சரிக்கை உணர்வோடு சீருடைகளை சரி பார்த்துக் கொண்ட னர். ஆண்கள் காக்கிச்சட்டை, டிராயர், பெண்கள் சாம்பல் வண்ண சேலை நீல வர்ண கச்சையணிந்திருக்கவேண்டும். சேலை மொட்டிக் காலுக்கு மேல் அணிந்திருக்க வேண்டும், தப்பி தவறி கெண்டைக்கால் தழுவ அணிந்தி ருந்தால் அந்த பெண்ணின் கதி அதோ கதிதான்.
ஆண்கள் வரிசையை சரி பார்த்துவிட்டு பெண்கள் வரிசைக்கு வந்தார் மேஸ்திரி. பெண்கள் மொட்டிக்கு மேல் சேலையை இழுத்து சொருகினா ர்கள். அந்த சாக்கில் மேஸ்திரி மேலயும் தூக்க வைக்க ரூல்ஸ் போடனும் என்று ஓவ்வொரு நாழும் நினைத்துக் கொள்வார்.
வரிசையின் நடுவில் பதினெட்டு வயதுடைய பெண், மெலிந்த தேகம், குதிரை முகம்,அகன்றதோல், அளவுக்கு மீறிய செழித்த மார்பு, அதன் கனத் தை தாங்க முடியாமல் ஒடியும் நிலையில் இடை, அதை தாங்கி நிற்கும் மடல் வாழை தொடை, கவிழ்ந்திருக்கும் நாதாஸ்வரத்தின் முனையில் காய்த்திருக்கும் வெள்ளரிப் பிஞ்சுகள். இவைகளை மூடி மறைத்திருக்கும் பொருத்தமற்ற கண்டாங்கி கரு நீல சேலை, உடலின் வனப்பும், செழிப்பும், அவளை உயர் குலப்பெண்ணாககாட்டியது.அம்மாவின்நிறத்தையும்,அப்பாவின்தேகத்தையும் தன்னுடலில் பொருத்திக்கொண்டாள். அதி காலை சாம்பல் பொழுதிலும், அவள் நிறத்தால் ஜொலி, ஜொலித்தாள் சந்தி ரா.
இவளுக்குப் பின் நான்கு பெண் பிள்ளைகள். ஒரு ஆண் பையன். அப்பன் முத்தையன்நல்லதொழிலாளிதிருமங்கலம்நகராட்சியில்சிறந்தவேலைக்காரன். துப்பரவு தொழிலை நுட்பமாய் கையாள்பவன், ஆனால் பெருங்க் குடிகாரன், துப்பரவு பணி செய்பவர்கள் எவ்வளவு சூட்சுமமாய் பணியா ற்றினாலும் மலக் கிணற்றின் ராட்ஸனிடமிருந்து தப்பியவர்கள். ஒரு சிலர் மட்டுமே அதற்கு முத்தையனும் ஒரு நாள் பலியானான்.
எப்படி நடந்தது, ஏன் நடந்தது, என விசாரணை என்பது கிடையாது அப்படி விசாரிக்க இவன் என்ன அரசியல் வாதியா,அல்லது நடிகரா, சாமனிய மனித குலத்தால் கூட அங்கிக் கரிக்கயியளாத சமூக பிராணி, சாலையில் அடி பட்டுக்கிடக்கும் நாய்க்கும், பூனைக்கும் என்ன நேர்மோ அதுதான் துப்பர வாளனுக்கும் நேர்ந்திடும் கொடூரம். மின்சார வயரில் நின்று கரைந்திடும் காகம் மின் தாக்கி உயிர் பிரிந்து கீழே விழுந்துக் கிடக்கும் தருவாயில் காக்கையினங்கள் அதனதன் மொழியில் கரைந்து தன் எதிர்ப்பைக் காட்டும். ஆனால் பாலய்ப் போன மனிதக் கூட்டம் இறந்தவனால் எதாவது நடக்க வேண்டியிருந்தால் மட்டுமே கூட்டம் கூடும், அல்லது தனக்கு கூட்டம் வேண்டும் என்ற சுய நலத்தோடு கூடிடும். ஆனால் சமூகத்தால் அங்கி காரமிழந்து மனித இனத்துக்குள் சேர்க்கப்படத ஒரு பிரிவு துப்பரவு பணியா ளர்கள். அப்படிப்பட்டவர்களின் இறப்பும், பிறப்பும் விளங்குகளின் வாழ்வியல் போன்றது.
முத்தையன் இறப்பு வழக்கம் போல் குடித்து விட்டு மலக் கிணற்றில் விழுந்து மரணமடைந்துவிட்டான். என்று அதிகாரிகள் கையூட்டு வாங்கிக் கொண்டு முடித்துவிட்டார்கள்.
அரசு இறந்தவனுக்கு கொடுக்கும் சலுகை அதே உயிர் குடிக்கும் மலக் குழியில் நீயும் விழுந்து சாகு, என துப்பரவு பணி அவன் மனைவிக்கும் கொடுக்கப் பட்டது.
அவளும் தன் கணவனின் தலையாயக் கடமையை தொடர்ந்தாள், முத்துப் பேச்சி. பெண்ணாய் பிறப்பதே பாவம் அதிலும் விழிம்பு நிலை வர்க்கத்தில் பிறப்பது அதை விட பாவம், இதையும் தாண்டி இளம் விதவையாய் வாழ்வது எல்லாவற்றிலும் கொடுமையோ, கொடுமை. கணவன் முத்தையன் இறக்கும் போது முத்துப்பேச்சிக்கு இருதைந்து வயதுதான் இருக்கும். முத்தவள் சந்திராவுக்கு பதி மூன்று வயது. மீதி பிள்ளைகள் அடுத்தடுத்து, முத்துப் பேச்சிக்கு பனிரெண்டு வயதில் திருமணம். அவள் பருவமடைந்த முப்பதாவது நாளில் திருமணம். பதிமூன்று வயதில் சந்திராவை பெற்றெடுத்தாள் அதன் பைன் அடுத்தடுத்து பிள்ளை கள். முத்தையன் தனது ஆஸ்த்தி அந்தஸ்த்தைக் கட்டி காப்பாற்ற ஆண் வாரிசு வேண்டி ஒரு சொட்டு இந்திரியத்தைக்கூட வீணாக்காமல் விதைத் தான். தொடர்ந்து பெண் பிள்ளைகள். ஆறு பெண் பிள்ளைகளுக்கு பிறகு அசந்த நேரத்தில் எக்ஸ், ஒய், ஒருங்கிணைந்து முத்தை யனுக்கு கருணை க் காட்டியது. ஆண் வாரிசு வந்ததை எண்ணி சேரி முழுவதையும் கள்ளச்சாரயத்தால் மிதக்கவிட்டான்.பத்துதினங்கள் இரவும் பகலும்ஆண்களும்,பெண்களும்,இணைந்துகஸாக்களின்கிராமதிருவிழாவைப் போல் கொண்டாடினார்.
முத்துப்பேச்சியைஉறவுக்காரன்முதல்ஊர்க்காரன்வரைஉறவு வைக்க ஆசைப் பட்டார்கள். தன் கணவன் அறுபது வயதுவரை தந்திடும், லெளகீக வாழ்க்கை யை இருபத்தைந்து வயதிலையே கொடுத்துச் சென்றமையால் அவனோடு படுத்துபகிர்ந்துக்கொண்டபாயைஇன்னும் மடக்காமல் பாதுகாத் தாள். ஆண்டா ண்டுக் காலத்துக்கும் அவளுக்கு அதுவே உக்கிரத்தை தனித்தது.
முத்தையனின் இறந்த வீட்டிலையே சோழவந்தான் சுப்பையன், முத்துப் பேச்சியை மூன்றாம் தாரமாக கேட்டுப் பார்த்தான். அவளின் ஆத்தாவும், அப்ப னு ம் கள்ளச்சாரத்துக்கு கட்டுப்பட்டு அவளை அசைத்துப் பார்த்தார் கள். அவள் அசைவதற்கு ஆலம் செடியல்ல, ஆலம் மரமென்றாள். உற்றாரும், உறவுக ளும் ஊர்க் கூடி பேசினார்கள். உறவைக்காட்டி இழுத்தார்கள். ‘’புடிச்சவனுக் கெல்லாம் பொண்டாட்டி ஆக முடியாது பொசக்கட்ட பயல்களா’’ என்று வந்த வர் களை விரட்டியடித்துவிட்டு வேறு குடிசைக்கு குடி போனாள். ஏனென்றால் முதலாம் குடியில் பிறந்து இரண்டாம் குடியில் வளர்ந்து மாற்றான் தாயிடம் மல்லுக்கட்டி இறுதியில் இளம் வயதையடை யாத நிலையில் இளமையை இளந்தவள்.
உடல் சுகத்துக்கு வேறேருவனிடம் சென்று விட்டால் தான் பெற்ற பிள்ளைகள் யாரிடம் சென்று யாசகம் கேட்கும். என்றயெண்ணத்தால் உருகாத பனிப் பாறையாய் உறைந்திருந்தாள்.
பிள்ளைகளை மற்ற சமூகத்தினர்கள் போன்று பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத் தாள். அதற்குன்டான உடை, உணவு தந்து துப்பரவு குடும்பத்தின் அடிப்படைப் படிமங்களை அடியோடு அகற்றினாள். மூத்தவள் ஒன்பதாம் வகுப்பை கடந்து கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் ஊரில் அள்ளும் மொத்த குப்பைகளையும் மலத்தையும் கொண்டுச் சென்று தட்டுவதற்காக ஊரின் கடைசிப் பகுதியான செங்கோட்டை தேசீய நெடுஞ்சாலையில் உள்ள உரக்கிடங்குக்கு மாட்டு வாண்டியில் ஏறிச் சென்றாள். மாட்டு வண்டியை ஓட்டிச்சென்ற அன்னக்கொடி மொன்ன போதையில் எதிரே வந்தகே.டி.ஸி பேருந்தில் விட்டுஅவனும் மாண்டு, பாவம்புள்ளக்குட்டிக் காரியும் சாவதற்கு காரணாமாகிப் போனான்.
இதற்கு அரசு சலுகையாக அடுத்த வாரிசு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சந்திரா வுக்கு துப்பரவு பணியை தந்தது. துப்பரவு பணி என்னவென்றே தெரியாமல் அவள் அம்மா வளர்த்திருந்தாலும், சந்திரா எழுதப்படிக்க தெரிந்திருந்தாலும் சமூகமும் அதை தயாரிக்கும் அரசாங்கமும் துப்பரவு குடும்பத்தில் பிறந்த வர்கள், கலெக்ட்டருக்கே படித்திருந்தாலும் கக்கூஸ் கழுவத்தான் அனுப்பும். அதன் படி சந்திராவுக்கும் துப்பரவு பணிகொடுக்கப்பட்டது.முதலில்மறுத்தாள். பின்பு தாய் தகப்பன் வாங்கிய கடன்களை அடைப்பதற்கும். கலங்கி நிற்கும் ஐந்து பெண் பிள்ளைகள், முத்தை யனின் சமஸ்த்தானத்தை காப்பாற்ற பிறந்த ஆண் வாரிசையும் காப்பாற்றி அடுத்தடுத்து நகரத் சுத்தி தொழிலாளியாக்க சந்திராவும் முடிவுக்கு வந்தாள்.
பணியில்சேர்ந்தசந்திராவுக்குநகரச்சுத்தி தொழிலாளியின் அடிப்படை கூறுகள் பற்றி தெரிந்திருக்கவில்லை, படித்தவளுக்கு எல்லாம் தெரியுமெ ன்ற அசாத ரணமான நம்பிக்கையால் யாரும் அவளுக்கு சொல்லிக் கொடுக்க வில்லை.
பெண்களில் தனிதிருந்த சந்திராவை மேஸ்திரி அளந்தான். அவள் துப்பரவு பணிக்கான சீருடை அணிந்திருந்தாளும் அதை விதிப்படி பின் கொசுவம் வைத் து மொட்டித் தெரிய அணிந்திருக்கவில்லை. அதற்குப் பதிலாக முன் கொசுவம் வைத்து குதிங்கால் தழுவி தரை படர அணிந்திருந்தாள். அள்ளி முடிந்து சொருக வேண்டிய கூந்தலை பின் முகங்களில் தழுவிட வைத்திருந்தாள். இது போததா அலுவலர் அவளுக்கு தண்டனை கொடுப்பதற்கு. அதுவும் பதினெ ட்டு வயதுடைய பெண்ணுக்கு. கரும்பு திண்ண கூலி அல்லவா.
‘’ஏத்தா ஒம் பேரு என்ன?’’
‘’சா..சந்திரா.. ங்க..சார்’’
‘’சாரா? ஏத்தம் தாண்டி ஒனக்கு கக்கூஸ் கழுவ வந்திருக்கீயா? இல்ல கரக்காட் டம் ஆட வந்தியா?’’
‘’என்னங்கய்யா’’
‘’ம் நொன்னங்கய்யா போ அங்க போயி நில்லு” என்றான் மேஸ்திரி அவள் பணியாளர் கூட்டதிலிருந்து விலகி நின்றாள். மற்றவர்களைப் பார்த்து கடுமை யாக முகத்தை வைத்துக்கொண்டு சத்தமாக கத்தினான் மேஸ்திரி.
‘’இப்ப லயனுக்கு வருவேன் யாரச்சும் வேள தளத்துலெ இல்லமே கொவாரு வந்திச்சி, தொலச்சுப்புடுவேன்’’என்றான்.
அனைவரும் வெளியேறி நகராட்சி அலுவலகம் பின் பகுதியில் துப்பரவு கருவிகளை எடுத்தனர். ஆண்கள் கால்வாய் அள்ளும், அகப்பை, தூப்புமார்கள். பெண்கள் மலம் அள்ளும், கேள்வி குறியைப்போல் வளைந்திருக்கும் தகரக் கரண்டிகள், குப்பைகள் அள்ளிச் செல்ல இரும்பு தட்டுக்கள், கூட்டி அள்ளுவ தற்க்கான பருத்தி மார் தட்டுக்கள். எடுத்தனர். ஆண்களில்ஒரு சிலர் மெத்த கழிவுகளையும் கொள்முதல் செய்து அள்ளிச் செல்வதற்கு ஒற்றை மாடு பூட்டிய கட்டை வண்டிகளை இழுத்துச் சென்றனர். துப்பரவு தளவடாங் களை எடுத்துச் சென்றுக்கொண்டே ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் ‘’பாவம் வேலக்கி வந்தணைக்கே மாட்டிக் கிட்டா என்ன பாடு படப் போறாளோ’’ என காதோரமாய் கிசு, கிசுத்தாள்.
‘’சாமி தான் காப்பாத்தனும்’’ என்றாள் மற்றொருத்தி. சந்திரா, புயலின் காத்திர த்தால் முறியப் போகும் கிளையில் சிறகு சிலிர்க்க மாட்டிக் கொண்டிருக்கும் சிறியப் பறவைப் போன்று துடி துடித்து நின்றிருந்தாள்.
பாலு பெரியப்பாவை எதிர் நோக்கி நகராட்சியின் வாசலில் காத்திருந்தான். அவர்ஒற்றை மாட்டு வண்டியை எடுத்துக் கொண்டு உள்ளிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார். அப்போது சந்திரா அவரை பார்த்தாள். அவர் அவளுக்கு என்ன செய்து விட முடியும் என்ற கையாளாகத தனத்தை தன் முகத்தில் படர விட்டுச் சென்றார். பெரியப்பாவை கவனித்த மேஸ்திரி.
‘’மாரியப்பா’’
‘’அய்யா’’
‘’நீ இன்னக்கி கூட்ட போ அள்ள ஆளு இல்ல ரெண்டயும் சேத்துப் பாத்துக்கோ’’
‘’ஆட்டுங்கஎசமான்’’எனசொல்லியப்படிமாட்டின்மூக்கணாங்கயிற்றைபிடித்தி ழுத்தப்படி நகன்றார். வெளியேறியவருக்கு நினைத்தட்டி கூட்ட வேண்டுமென் றால் துப்புமாறு எடுக்க வேண்டும். திரும்ப சென்று எடுக்கப் போனால் மேஸ் திரி காட்டு கத்துவான் ‘’சரி சமாளிப்போம்’’ என நினைத்துக் கொண்டே வெளியே வந்தார். பாலு நின்றிருந்தான்.
‘’ஏறுடா’’ என்றார். அவன் வண்டியில் ஏறுவதற்கு கூச்சப் பட்டுக்கொண்டு ஏற மறுத்து விட்டான். வண்டி ஆனந்தா தியேட்டர் பக்கமாய் ஓட்டிச் சென்று நிறுத்தினார். மதுரைக்கு செல்லும் பி,ஆர்,சி பேருந்து கடந்து கொண்டிருந் தது.அதிகாலைஎன்பதால்மனிதநடமாட்டம்குறைந்திருந்தது.
சாலை ஓர பூ வியாபாரிகள் புத்தம் புதிதாய் வெண் பனியில் நனைந்த மலர்க ளை ஒன்றினைத்து மாலை தொடுத்துக்கொண்டிருந்தனர். மாட்டு வண்டியில மந்திருந்த பெரியப்பா பாலுவைப்பார்த்து ‘’டேய் கொட்டாய்ட்ட இரு நா போயி தூப்பு மாறு எப்பீட்டு வர்சுறேன்’’என சொல்லியவாறு வண்டியிலிருந்து குதித்து தியேட்டருக்கு பின் உள்ள ரயிலடி சந்துக்குள் நுழைந்தார். அவன் தியேட்டர் வாசலில் போய் நின்றான். மாடு கால்களை மாற்றி, மாற்றி உலுக் கியது, வலது கண்ணீல் ஏறிக்கொண்டிருந்த ஈயை இமையால் விரட்டியது. தியேட்டர் விளம்பர பலகையில் ‘’மைக்கேல்ராஜ்’’ என்ற வால் போஸ்ட்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதன் மீது நாயகன் ரகுவரன் மோட்டார் வாகனத்தில் பயணிப்பதுப் போன்ற காட்சியும், நடிகை ரஞ்சனி முகம் வியர்க்க பயந்த சுவாத்தில் பாவனை செய்தப்படி இருந்தது. வால் போஸ்ட்டரின் கீழ் பகுதியில் நடிகர், நடிகையின் பெயரும், படம் போட்ட நாளை ஊதா வண்ணத்தில் 24.2.87. என குறிப்பிட்டு எழுதி ஒட்டிருந்தது.
சந்திரா பட, படப்போடு நின்றிருக்கையில் மேஸ்திரி அலுவலகத்துக்குள்ளியி ருந்து வெளியே வந்து அவளை ஏற, இறங்க பார்த்து விட்டு ‘’ஏத்தா ஒம் பேரு என்ன சொன்ன’’ முன்பு போல் இல்லாமல் குலைந்தப்படி கேட்டான். அவன் கேட்ட தோரனை அவளுக்கு சந்தேகத்தை கிளப்பி னாலும் பயம் குறைந்ததாக தோன்றியது. அதனால் இயல்பாக பதிலளித் தாள்.
‘’சரி,சரி அப்பவெ சொன்னைலே நா மறந்துட்டேன் அய்யாட்டே சொல்லிட்டே ன் புதுசா வந்துருக்கேன்னு நாளப்பின்ன ஒழுங்கா வரப் பாரு இன்னைக்கி அய்யா ரூம்ப கூட்டி விட்டுட்டு தண்ணி எடுத்து வைச்சிட்டு போ’’ என சொல்லி விட்டு அவனின் பி,எஸ்,ஸி சைக்கிளில் ஏறி சென்று விட்டான்.
அவள் அலுவலகத்துக்குள் தயங்கியபடி சென்று ஒரு கனம் நின்றுப் பார்த்தாள் ஆய்வாளர்பெயர்பதிவேட்டில்துணைகையொப்பம்இடுகைசெய்துக் கொண்டி ருந்தார். இவள் தலை குனிந்து வார்த்தை வந்தும் சொல்ல முடியாமல் மனதுக் குள் முனங்கிக் கொண்டே வணக்கம் வைத்தாள். அவர் கவனிக்கவில்லை அவள்அதற்கு மேல் நிற்காமல் தன் கடமையை செய்திட அலுவலக கழிவறை க்குள் நுழைந்து குச்சி மாரை எடுத்து கழிவறையை அவசர, அவசரமாக அலசி அகற்றிவிட்டு, மூலை யிலிருந்த ஈஞ்ச மாரை எடுத்து அறையை பெருக்கினாள்.
நேரம்கடந்ததுஅவள் பயந்தப் படி எதுவும்அங்கு நடந்துவிடவில்லை அதனால் பலகிய மாட்டைப் போல் இயங்கினாள்.
ஆய்வாளர் அமர்ந்திருக்கும் மேஜைக்கடியில் கூட்ட வேண்டும் தயங்கி நின்றாள் அவள் நிலையறிந்த ஆய்வாளர் எழுந்து கூட்டுவதற்கு வழி தந்தார் அவள் மேஜைக்கடியில் தலையைக் கொடுத்து கூட்டிக் கொண்டிருந்தாள்.
ஆய்வாளர் பின் நகன்று முன் கதவை தாழிட்டார் அது அவளுக்கு கேட்க வில்லையென்றாலும் அறையில் படர்ந்திருந்த வெளிச்ச கீற்றுகளின்றி இருள் படர்ந்தமையால் தன்னிலையடைந்து மேஜைக்குள்ளியிருந்து தலையை வெளியே எடுக்க முற்பட்டாள் ஆனால் அவளுக்குள் மின்னல் கீறியது என்ன வென்று அலுவலரை சந்தேகித்து தலை தூக்கி பார்க்க கூடாது ஒரு நேரத் துக்குஅவர்கதவை சாத்தி விட்டு வெளியில் சென்றிருக்கலாம் என நினைத்துக் கொண்டு வேளையில் மும்பரமானாள்.
ஆய்வாளர் அவள் பின் புறம் வந்து நான்காம் முக பிளவை வருடினார். அவள் சர்ப்ப தீண்டலுக்கு ஆட்ப் பட்டவளாய் துடி, துடித்து முன் பகுதி மேஜை காலில் முட்டி மோதினாள். அவள் மேஜைக்கடியில் மாட்டிக் கொண்டாள். அவளின் பின்புலம்ஆய்வளரிடம்மாட்டிக்கொண்டது.திமுறினாள். திண்டாடினாள், கத்தி னாள்.அவள்சத்தம் அறையில் மோதி சாளரமும், கதவுகளும், மரக் நாற்காலிக ளும், மேஜையும்,பேரடுகளும் சிரித்தது. ‘’புதுசா கத்துர நாங்க இது மாதிரி எத்தனபார்த்திருப்போம்என்ன புதுசு அதான் கத்துர கத்தாதே கத்துக்கோ அப்பத் தான் ஒம் முன்னோர்கள் போன்று நீயும் வாழ முடியும்’’ என்று ஆலோசனை கள் வழங்கியது உயிரற்ற சடங்கள். அவள் திமிறிக்கொண்டு மேஜைக்கடியில் போராடினாள். அவர் கைகளில் இரண்டாம் முகங்கள் நசிங்கிக் கொண்டே யிருந்தது. முட்டி மோதியவளின்மூக்குமேஜைக்காலில்முட்டிரத்தம் கசிந்தது.
ஆய்வாளர் அவளை அவர் காலுக்கடியில் மடக்கிக்கொண்டு பாதம் தழுவி யிருக்கும்சேலையைதூக்கிபின்முதுகில்லாபகமாய்போட்டார்.அவள்அணிந்தி ருந்தசிகப்புநிறஉள்பாவாடைபாதிகிழிந்து,அதில்வெள்ளைநூலால்கொங்கானி ப் போட்டு தைத்திருந்த வறுமையின் கோரத் தாண்டவம் உள்ளாடையில் உணர்த்தியும், கேட்க நாதியற்ற ஏழைப் பெண்ணின் வாழ்வை சீரளிக்கப் போகிறமே என்ற குற்ற உணர்வு ஆய்வாளரை ஒரு நொடி உணர்த்தினாலும். விரட்டிச் சென்ற விலங்குக்கு கால் முறிந்து விட்டால் கருணைக் காட்டி விட்டு விடுவானா வேட்டைக் காரன் அவனுக்கு மேலும் ஓட முடியாமல் திணறி நிற்பது எப்படி வசதியாக இருக்குமோ அது போன்று தான் சந்திராவின் நிலையும்.
அவள்நீண்டபோராட்டத்துக்குப்பின்துவண்டாள்அதைபயன் படுத்திக் கொண்டு அவர் நிதனமாய் அவர் துவண்ட குறியை எடுத்து அழுத்தாரம் பித்தார். ஆனால் அவர் வேகத்துக்கு அது கட்டுப்பட வில்லை அதனால் அதைதயார் செய்திட அவர்மனசுக்கும்உறுப்புக்கும்முடித்துப்போட்டுலயித்திருந்தார்.அவள் விழிக்க ஆரம்பித்தாள். அவள் முன் மேஜைக் காலின் பிடியை அழுத்திப் பற்றிய படி பின் வலது காலால் விட்டால் ஒரு எத்து அவர் குறியில் அவர் அப்படியே உட்க்கார இவள் அந்த கணத்தில் எழுந்து மறு படி ஆய்வா ளருக்கு அடப்போடு மீண்டும் ஒரு எத்து விழுந்தார் சுவரோடு. கூண்டிலிருந்து பறவை சிறகடித்து பறந்தது.
சற்றுநேரத்துக்குமுன்பு சந்திராவைப் பார்த்து சிரித்த உயிரற்ற சடங்கள் முதன் முறையாக ஆய்வாளரைப் பார்த்து கொக்கரித்தது. அதனால் ஆத்தரம டைந்த ஆய்வாளர் எழுந்து வெளியே ஓடிக் கொண்டிருக்கும் சந்திரவை கவனித்தார் அவள் அவிழ்ந்த சேலையை அரை குறையாய் தூக்கிப் போட்டுக்கொண்டு அலுவலக வளாகத்தை கடக்க எதிரில் பெரியப்பாவும், பாலுவும் அலுவலகத் தில் தூப்பு மார் எடுக்க வந்தவர்கள். அவளை கவனித்தனர். அடிப்பட்ட பாம் பான ஆய்வாளர் அவளை தொடர்ந்து விரட்டி வர பெரியப்பா நிலை குலைந்து சாட்சியாக நின்றார். ஆய்வாளர் கத்தினார்.
‘’யேய் மாரியப்பா அவளே புடி’’
‘’என்ன எசமான்’’ என அவசரமாய் கேட்பதுப் போல் பாவித்தார் பெரியப்பா.
‘’மோதுரத்த தூக்கிட்டு ஓடுறா’’ எனச் சொன்னார். அவள் அவர்களை கடந்து ஓடிவிட்டாள்.
வைப்பாற்றுப் பாலத்தின் சிமெண்டு சாலையிலிருந்து பேருந்து கருத்த தார்ச் சாலையிலிறங்கி வேகமெடுத்தது, பின் சக்கர மேல் தட்டில் அமர்ந்தி ருக்கும் பாலுவுக்கு உணர்த்தியது. பேருந்தின் உருளிப் பட்டை முன்னோ க்கி உருள, அவனின் மனச்சக்கரம் பின் நோக்கி உருளாரம்பித்தது.
‘’டேய் பாலா அடேய் ஒன்னத்தாண்டா’’ தட்,தட்டென பாலுவின் பெரியப்பா தகர கதவைத் தட்டினார். அவனிடமிருந்து எவ்வித பதிலுமில்லை.
‘’ஓய் கூப்புடுறது காதுல விழல மாப்புளே ஜோக்கு பேதும்டா பொழப்பப் பாரு’’என மீண்டும் கத்தினார். மனைவியோடு படுத்திருந்தவன் பேய் கண்டு அரண்டவன்ப் போல் பட, படவென எழுந்து அவிழுந்திருந்த லுங்கியை சரி செய்துக் கொண்டே அவரசரமாய் கதவைத் திறந்தான்.
‘’என்னப்பா இன்னும் விடிலையா? என்றார் அவன் பதில் தேடுவதற்குள், அவர் துவங்கி விட்டார்.
‘’வேல வெட்டிக்கி போனும் நெனப்புயில்லையா?’’ பொண்டாட்டி சொகமெல் லாம் பொழப்புலயிருக்கு முந்தனைக்குள்ள மொடங்கிக் கிடந்தா கஞ்சிக்கி கையேந்தனும், கல்யாணம் முடிச்சி பத்துனாளாச்சி ஒங்கப்பேன் மயிரு போச் சின்னு ஒப்படச்சிட்டுப் போய்ட்டான், ஒன்ன நம்பி பின்னால வந்த புள்ளயே காப்பாத்த வேணாமா?’’என அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் பாயிலிருந்து படக்கென்று எழுந்து அடுப்படிக்குள் சென்று நின்று கொண்டாள். அவரின் அறிவுரை திருடர்களை கண்டிப்பதைப்போல் உணர்ந்தாள்.
‘’சரி நா முன்னேப் போறேன் வெரசா வரப்பாரு’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். பாலு வீட்டுக்குள் வந்து மனைவியைத் தேடினான். அவள் களைந்தி ருந்த சேலையை சரி செய்துக் கொண்டிருந்தாள். இவன் இரும்பு வாளியி லுள்ள தண்ணீரை தகர போனியில் கோரி முகம் அலம்பி கொப்பளித்து லுங்கி அடிமுனையில் முகம் துடைத்துவிட்டு, மண் சுவற்றின் மதில் மேலிருந்த கையளவுள்ள கண்ணாடியில் அவசரமாய் தலைக் கோதி, முகம் பார்த்தான். வலது கண்ணத்தில் கடிவாய் சிவந்தி ருந்தது. தடவி பார்த்து விட்டு தன் ஆண் மையின்அராஜகத்தின் அவலத்தை எண்ணி வருத்தமாய் அவளைப் பார்த்தான். அவள்அர்த்த சாமத்தின் அடையாளங்களை களைந்த ஆடையில் கரைத்துக் கொண்டிருந்தாள். அதனால் அவளிடம்எதிர்வினையில் லை.
‘’போயிட்டு வாறேன்’’ என்றான். அவள் அதற்கு பதிலேதும் சொல்லவில் லைஅவனும்அதற்க்காககாத்திருக்கவில்லை.ஏனெனில்அவள்நினைத்தது ஒன்று இப்போது நடந்துக்கொண்டிருப்பது வேறு.
பெரியப்பா பெயர் பதிவு செய்திடும் நகராட்சி அலுவலகத்திற்குள், ஓட்டமும், நடையுமாக வந்துச் சேர்ந்தார்.
அங்கே ஆணும், பெண்களுமாய் குழுமிருந்தனர். சிலர் அப்போதுதான் ஓடோ டியும்,வேகமானநடையுமாக வந்துக்கொண்டிருந்தனர். சுகாதார ஆய்வா ளர் அலுவலகத்தில்மரநாற்காலியில்அமர்ந்தப்படிசாளரம்வழியாக கவனித்துக் கொண்டிருந்தார்.
மேஸ்திரிபெயர் பதிவேட்டை மடியில் வைத்தப்படி அலுவலக வாசளில் அமர்ந்து வந்தவர்களையும் வந்துக்கொண்டியிருப்போரையும், நேட்டம் விட்டவாறு, அலுவலக சுவரில் பொருத்திருந்த அஜான்டா வட்டவடிவ கடிக்காரத்தில் நொடிகளை கணக்கிட்டுக் கொண்டிருந்தார். பெரிய முள், நான்கு ஐம்பத்தெட்டிலும், சின்ன முள், நான்கிலும், நின்று நொடிகளை கரைத்தப்படி இருந்தது. ஐந்தாக இரண்டு நிமிடங்கள் இருக்கவே அலுவலக மணியை அடிக்க உத்தரவுப் பிறப்பித்தார் மேஸ்திரி.
‘’டேய்முனியாஅடிடா’’என்றார்.இதற்க்காகவேகாத்திருந்த முனியன் இருப்புப் பாதையின் தண்டவாளத்தின் அரையடி அளவிலுள்ள இரும்பு துண்டை உருளை வடிவிளான தடியால் உடல் அதிர அடித்தான். அதுதான் துப்பரவு பணியாளர்களுக்கான மனித கழிவுகளை மனிதனை அகற்ற வேண்டிய அவள மணி. அடித்தான் டங்..டங்.. டங்.. .. டய்ங்.. டய்ங்.. அந்த பெல் அடிப்பதில் அவனுக்கொரு மகிழ்ச்சி அவனடிக்கும் பெல்லில்தான் மொத்த பணிகளும் நடைபெறுகிறது. ஒவ்வொரு துப்பரவு பணியாளர்க ளின் தினசரி பணி அவன் கைகளில்தான் இருப்பதாக உணர்ந்தான். ஓடிவந்த இரண்டு ஆண்க,ஒரு பெண் வரிசையை விட்டு தனியாக நின்றனர். மேஸ்திரி பெயர்களை வாசித்தார்.
‘’முத்தம்மா’’
‘’இருக்கேன் எசமா’’
‘’மாரியப்பா’’
‘’வந்தேன் சாமி’’
‘’முனியா’’
‘’வந்தேன் எசமான்’’
மேஸ்திரி பெயர் வாசிக்க, வாசிக்க தொழிலாளிகள் தலை கவிழ்ந்தப்படி முன் சென்று ஆய்வாளரை வணங்கியப்படி திரும்பாமல் பின்னாடி சென் றனர்.அவர்,அவர்களைஒருமுறைபார்த்துவிட்டுபதிவேட்டில் டிக் செய்தார்.
பெயரடுப்பு முடிந்து தொழிலாளிகள் எதிர்ரெதிரே வரிசையாக நின்றனர். மேஸ்திரி அனைவரையும் ஆராய்ந்து விட்டு இடையில் நின்றிருந்த முத்தனை கவனித்துவிட்டார்.
‘’ஏலேய் முத்தா’’
‘’எசமான்’’என்று நாடியில் கைவைத்து குனிந்து நின்றான்.
‘’தள்ளிப்போடா’’என்றார் மேஸ்திரி அவனுக்கு என்னவென்று புரியாமல் வரிசையிலிருந்து விழகி நின்றான். அவனுக்கு விளங்கும் விதமாகவும், ஆய்வாளார் காதில் பதியுமளவுக்கும் கத்தினார்.
‘’பெரிய மொளாலி நெனப்பு மைரோ வேட்டிக் கட்டிட்டு வந்திருக்க’’ என அரட்டினார் மேஸ்திரி. அப்போதுதான் காக்கி டிராயர் அணியாமலிருப்ப தை உணர்ந்தான்.
‘’எசமான் நேத்து ராத்திரி செக்கானத்துக்கு தேவைக்கு போன கையோடு மறதியா வந்துட்டேன் மண்ணிக்கனும் எசமா சமூகம் மண்ணிக்கனும்.’’
‘’பொஞ்சாதிய மறப்பியாடா போ, போ ரெண்டு நாளைக்கு நிப்பாட்டிருக்கு’’ என முகத்தை கடுமையாக்கிக் கொண்டு சொன்னார். அவன் அதற்க்கு மேல் நிற்க வில்லை, மேலும் நின்றால் இரண்டு நாள் ஐந்து நாட்களை தாண்டிவிடும்.
தொழிலாளிகள்எச்சரிக்கை உணர்வோடு சீருடைகளை சரி பார்த்துக் கொண்ட னர். ஆண்கள் காக்கிச்சட்டை, டிராயர், பெண்கள் சாம்பல் வண்ண சேலை நீல வர்ண கச்சையணிந்திருக்கவேண்டும். சேலை மொட்டிக் காலுக்கு மேல் அணிந்திருக்க வேண்டும், தப்பி தவறி கெண்டைக்கால் தழுவ அணிந்தி ருந்தால் அந்த பெண்ணின் கதி அதோ கதிதான்.
ஆண்கள் வரிசையை சரி பார்த்துவிட்டு பெண்கள் வரிசைக்கு வந்தார் மேஸ்திரி. பெண்கள் மொட்டிக்கு மேல் சேலையை இழுத்து சொருகினா ர்கள். அந்த சாக்கில் மேஸ்திரி மேலயும் தூக்க வைக்க ரூல்ஸ் போடனும் என்று ஓவ்வொரு நாழும் நினைத்துக் கொள்வார்.
வரிசையின் நடுவில் பதினெட்டு வயதுடைய பெண், மெலிந்த தேகம், குதிரை முகம்,அகன்றதோல், அளவுக்கு மீறிய செழித்த மார்பு, அதன் கனத் தை தாங்க முடியாமல் ஒடியும் நிலையில் இடை, அதை தாங்கி நிற்கும் மடல் வாழை தொடை, கவிழ்ந்திருக்கும் நாதாஸ்வரத்தின் முனையில் காய்த்திருக்கும் வெள்ளரிப் பிஞ்சுகள். இவைகளை மூடி மறைத்திருக்கும் பொருத்தமற்ற கண்டாங்கி கரு நீல சேலை, உடலின் வனப்பும், செழிப்பும், அவளை உயர் குலப்பெண்ணாககாட்டியது.அம்மாவின்நிறத்தையும்,அப்பாவின்தேகத்தையும் தன்னுடலில் பொருத்திக்கொண்டாள். அதி காலை சாம்பல் பொழுதிலும், அவள் நிறத்தால் ஜொலி, ஜொலித்தாள் சந்தி ரா.
இவளுக்குப் பின் நான்கு பெண் பிள்ளைகள். ஒரு ஆண் பையன். அப்பன் முத்தையன்நல்லதொழிலாளிதிருமங்கலம்நகராட்சியில்சிறந்தவேலைக்காரன். துப்பரவு தொழிலை நுட்பமாய் கையாள்பவன், ஆனால் பெருங்க் குடிகாரன், துப்பரவு பணி செய்பவர்கள் எவ்வளவு சூட்சுமமாய் பணியா ற்றினாலும் மலக் கிணற்றின் ராட்ஸனிடமிருந்து தப்பியவர்கள். ஒரு சிலர் மட்டுமே அதற்கு முத்தையனும் ஒரு நாள் பலியானான்.
எப்படி நடந்தது, ஏன் நடந்தது, என விசாரணை என்பது கிடையாது அப்படி விசாரிக்க இவன் என்ன அரசியல் வாதியா,அல்லது நடிகரா, சாமனிய மனித குலத்தால் கூட அங்கிக் கரிக்கயியளாத சமூக பிராணி, சாலையில் அடி பட்டுக்கிடக்கும் நாய்க்கும், பூனைக்கும் என்ன நேர்மோ அதுதான் துப்பர வாளனுக்கும் நேர்ந்திடும் கொடூரம். மின்சார வயரில் நின்று கரைந்திடும் காகம் மின் தாக்கி உயிர் பிரிந்து கீழே விழுந்துக் கிடக்கும் தருவாயில் காக்கையினங்கள் அதனதன் மொழியில் கரைந்து தன் எதிர்ப்பைக் காட்டும். ஆனால் பாலய்ப் போன மனிதக் கூட்டம் இறந்தவனால் எதாவது நடக்க வேண்டியிருந்தால் மட்டுமே கூட்டம் கூடும், அல்லது தனக்கு கூட்டம் வேண்டும் என்ற சுய நலத்தோடு கூடிடும். ஆனால் சமூகத்தால் அங்கி காரமிழந்து மனித இனத்துக்குள் சேர்க்கப்படத ஒரு பிரிவு துப்பரவு பணியா ளர்கள். அப்படிப்பட்டவர்களின் இறப்பும், பிறப்பும் விளங்குகளின் வாழ்வியல் போன்றது.
முத்தையன் இறப்பு வழக்கம் போல் குடித்து விட்டு மலக் கிணற்றில் விழுந்து மரணமடைந்துவிட்டான். என்று அதிகாரிகள் கையூட்டு வாங்கிக் கொண்டு முடித்துவிட்டார்கள்.
அரசு இறந்தவனுக்கு கொடுக்கும் சலுகை அதே உயிர் குடிக்கும் மலக் குழியில் நீயும் விழுந்து சாகு, என துப்பரவு பணி அவன் மனைவிக்கும் கொடுக்கப் பட்டது.
அவளும் தன் கணவனின் தலையாயக் கடமையை தொடர்ந்தாள், முத்துப் பேச்சி. பெண்ணாய் பிறப்பதே பாவம் அதிலும் விழிம்பு நிலை வர்க்கத்தில் பிறப்பது அதை விட பாவம், இதையும் தாண்டி இளம் விதவையாய் வாழ்வது எல்லாவற்றிலும் கொடுமையோ, கொடுமை. கணவன் முத்தையன் இறக்கும் போது முத்துப்பேச்சிக்கு இருதைந்து வயதுதான் இருக்கும். முத்தவள் சந்திராவுக்கு பதி மூன்று வயது. மீதி பிள்ளைகள் அடுத்தடுத்து, முத்துப் பேச்சிக்கு பனிரெண்டு வயதில் திருமணம். அவள் பருவமடைந்த முப்பதாவது நாளில் திருமணம். பதிமூன்று வயதில் சந்திராவை பெற்றெடுத்தாள் அதன் பைன் அடுத்தடுத்து பிள்ளை கள். முத்தையன் தனது ஆஸ்த்தி அந்தஸ்த்தைக் கட்டி காப்பாற்ற ஆண் வாரிசு வேண்டி ஒரு சொட்டு இந்திரியத்தைக்கூட வீணாக்காமல் விதைத் தான். தொடர்ந்து பெண் பிள்ளைகள். ஆறு பெண் பிள்ளைகளுக்கு பிறகு அசந்த நேரத்தில் எக்ஸ், ஒய், ஒருங்கிணைந்து முத்தை யனுக்கு கருணை க் காட்டியது. ஆண் வாரிசு வந்ததை எண்ணி சேரி முழுவதையும் கள்ளச்சாரயத்தால் மிதக்கவிட்டான்.பத்துதினங்கள் இரவும் பகலும்ஆண்களும்,பெண்களும்,இணைந்துகஸாக்களின்கிராமதிருவிழாவைப் போல் கொண்டாடினார்.
முத்துப்பேச்சியைஉறவுக்காரன்முதல்ஊர்க்காரன்வரைஉறவு வைக்க ஆசைப் பட்டார்கள். தன் கணவன் அறுபது வயதுவரை தந்திடும், லெளகீக வாழ்க்கை யை இருபத்தைந்து வயதிலையே கொடுத்துச் சென்றமையால் அவனோடு படுத்துபகிர்ந்துக்கொண்டபாயைஇன்னும் மடக்காமல் பாதுகாத் தாள். ஆண்டா ண்டுக் காலத்துக்கும் அவளுக்கு அதுவே உக்கிரத்தை தனித்தது.
முத்தையனின் இறந்த வீட்டிலையே சோழவந்தான் சுப்பையன், முத்துப் பேச்சியை மூன்றாம் தாரமாக கேட்டுப் பார்த்தான். அவளின் ஆத்தாவும், அப்ப னு ம் கள்ளச்சாரத்துக்கு கட்டுப்பட்டு அவளை அசைத்துப் பார்த்தார் கள். அவள் அசைவதற்கு ஆலம் செடியல்ல, ஆலம் மரமென்றாள். உற்றாரும், உறவுக ளும் ஊர்க் கூடி பேசினார்கள். உறவைக்காட்டி இழுத்தார்கள். ‘’புடிச்சவனுக் கெல்லாம் பொண்டாட்டி ஆக முடியாது பொசக்கட்ட பயல்களா’’ என்று வந்த வர் களை விரட்டியடித்துவிட்டு வேறு குடிசைக்கு குடி போனாள். ஏனென்றால் முதலாம் குடியில் பிறந்து இரண்டாம் குடியில் வளர்ந்து மாற்றான் தாயிடம் மல்லுக்கட்டி இறுதியில் இளம் வயதையடை யாத நிலையில் இளமையை இளந்தவள்.
உடல் சுகத்துக்கு வேறேருவனிடம் சென்று விட்டால் தான் பெற்ற பிள்ளைகள் யாரிடம் சென்று யாசகம் கேட்கும். என்றயெண்ணத்தால் உருகாத பனிப் பாறையாய் உறைந்திருந்தாள்.
பிள்ளைகளை மற்ற சமூகத்தினர்கள் போன்று பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத் தாள். அதற்குன்டான உடை, உணவு தந்து துப்பரவு குடும்பத்தின் அடிப்படைப் படிமங்களை அடியோடு அகற்றினாள். மூத்தவள் ஒன்பதாம் வகுப்பை கடந்து கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் ஊரில் அள்ளும் மொத்த குப்பைகளையும் மலத்தையும் கொண்டுச் சென்று தட்டுவதற்காக ஊரின் கடைசிப் பகுதியான செங்கோட்டை தேசீய நெடுஞ்சாலையில் உள்ள உரக்கிடங்குக்கு மாட்டு வாண்டியில் ஏறிச் சென்றாள். மாட்டு வண்டியை ஓட்டிச்சென்ற அன்னக்கொடி மொன்ன போதையில் எதிரே வந்தகே.டி.ஸி பேருந்தில் விட்டுஅவனும் மாண்டு, பாவம்புள்ளக்குட்டிக் காரியும் சாவதற்கு காரணாமாகிப் போனான்.
இதற்கு அரசு சலுகையாக அடுத்த வாரிசு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சந்திரா வுக்கு துப்பரவு பணியை தந்தது. துப்பரவு பணி என்னவென்றே தெரியாமல் அவள் அம்மா வளர்த்திருந்தாலும், சந்திரா எழுதப்படிக்க தெரிந்திருந்தாலும் சமூகமும் அதை தயாரிக்கும் அரசாங்கமும் துப்பரவு குடும்பத்தில் பிறந்த வர்கள், கலெக்ட்டருக்கே படித்திருந்தாலும் கக்கூஸ் கழுவத்தான் அனுப்பும். அதன் படி சந்திராவுக்கும் துப்பரவு பணிகொடுக்கப்பட்டது.முதலில்மறுத்தாள். பின்பு தாய் தகப்பன் வாங்கிய கடன்களை அடைப்பதற்கும். கலங்கி நிற்கும் ஐந்து பெண் பிள்ளைகள், முத்தை யனின் சமஸ்த்தானத்தை காப்பாற்ற பிறந்த ஆண் வாரிசையும் காப்பாற்றி அடுத்தடுத்து நகரத் சுத்தி தொழிலாளியாக்க சந்திராவும் முடிவுக்கு வந்தாள்.
பணியில்சேர்ந்தசந்திராவுக்குநகரச்சுத்தி தொழிலாளியின் அடிப்படை கூறுகள் பற்றி தெரிந்திருக்கவில்லை, படித்தவளுக்கு எல்லாம் தெரியுமெ ன்ற அசாத ரணமான நம்பிக்கையால் யாரும் அவளுக்கு சொல்லிக் கொடுக்க வில்லை.
பெண்களில் தனிதிருந்த சந்திராவை மேஸ்திரி அளந்தான். அவள் துப்பரவு பணிக்கான சீருடை அணிந்திருந்தாளும் அதை விதிப்படி பின் கொசுவம் வைத் து மொட்டித் தெரிய அணிந்திருக்கவில்லை. அதற்குப் பதிலாக முன் கொசுவம் வைத்து குதிங்கால் தழுவி தரை படர அணிந்திருந்தாள். அள்ளி முடிந்து சொருக வேண்டிய கூந்தலை பின் முகங்களில் தழுவிட வைத்திருந்தாள். இது போததா அலுவலர் அவளுக்கு தண்டனை கொடுப்பதற்கு. அதுவும் பதினெ ட்டு வயதுடைய பெண்ணுக்கு. கரும்பு திண்ண கூலி அல்லவா.
‘’ஏத்தா ஒம் பேரு என்ன?’’
‘’சா..சந்திரா.. ங்க..சார்’’
‘’சாரா? ஏத்தம் தாண்டி ஒனக்கு கக்கூஸ் கழுவ வந்திருக்கீயா? இல்ல கரக்காட் டம் ஆட வந்தியா?’’
‘’என்னங்கய்யா’’
‘’ம் நொன்னங்கய்யா போ அங்க போயி நில்லு” என்றான் மேஸ்திரி அவள் பணியாளர் கூட்டதிலிருந்து விலகி நின்றாள். மற்றவர்களைப் பார்த்து கடுமை யாக முகத்தை வைத்துக்கொண்டு சத்தமாக கத்தினான் மேஸ்திரி.
‘’இப்ப லயனுக்கு வருவேன் யாரச்சும் வேள தளத்துலெ இல்லமே கொவாரு வந்திச்சி, தொலச்சுப்புடுவேன்’’என்றான்.
அனைவரும் வெளியேறி நகராட்சி அலுவலகம் பின் பகுதியில் துப்பரவு கருவிகளை எடுத்தனர். ஆண்கள் கால்வாய் அள்ளும், அகப்பை, தூப்புமார்கள். பெண்கள் மலம் அள்ளும், கேள்வி குறியைப்போல் வளைந்திருக்கும் தகரக் கரண்டிகள், குப்பைகள் அள்ளிச் செல்ல இரும்பு தட்டுக்கள், கூட்டி அள்ளுவ தற்க்கான பருத்தி மார் தட்டுக்கள். எடுத்தனர். ஆண்களில்ஒரு சிலர் மெத்த கழிவுகளையும் கொள்முதல் செய்து அள்ளிச் செல்வதற்கு ஒற்றை மாடு பூட்டிய கட்டை வண்டிகளை இழுத்துச் சென்றனர். துப்பரவு தளவடாங் களை எடுத்துச் சென்றுக்கொண்டே ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் ‘’பாவம் வேலக்கி வந்தணைக்கே மாட்டிக் கிட்டா என்ன பாடு படப் போறாளோ’’ என காதோரமாய் கிசு, கிசுத்தாள்.
‘’சாமி தான் காப்பாத்தனும்’’ என்றாள் மற்றொருத்தி. சந்திரா, புயலின் காத்திர த்தால் முறியப் போகும் கிளையில் சிறகு சிலிர்க்க மாட்டிக் கொண்டிருக்கும் சிறியப் பறவைப் போன்று துடி துடித்து நின்றிருந்தாள்.
பாலு பெரியப்பாவை எதிர் நோக்கி நகராட்சியின் வாசலில் காத்திருந்தான். அவர்ஒற்றை மாட்டு வண்டியை எடுத்துக் கொண்டு உள்ளிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார். அப்போது சந்திரா அவரை பார்த்தாள். அவர் அவளுக்கு என்ன செய்து விட முடியும் என்ற கையாளாகத தனத்தை தன் முகத்தில் படர விட்டுச் சென்றார். பெரியப்பாவை கவனித்த மேஸ்திரி.
‘’மாரியப்பா’’
‘’அய்யா’’
‘’நீ இன்னக்கி கூட்ட போ அள்ள ஆளு இல்ல ரெண்டயும் சேத்துப் பாத்துக்கோ’’
‘’ஆட்டுங்கஎசமான்’’எனசொல்லியப்படிமாட்டின்மூக்கணாங்கயிற்றைபிடித்தி ழுத்தப்படி நகன்றார். வெளியேறியவருக்கு நினைத்தட்டி கூட்ட வேண்டுமென் றால் துப்புமாறு எடுக்க வேண்டும். திரும்ப சென்று எடுக்கப் போனால் மேஸ் திரி காட்டு கத்துவான் ‘’சரி சமாளிப்போம்’’ என நினைத்துக் கொண்டே வெளியே வந்தார். பாலு நின்றிருந்தான்.
‘’ஏறுடா’’ என்றார். அவன் வண்டியில் ஏறுவதற்கு கூச்சப் பட்டுக்கொண்டு ஏற மறுத்து விட்டான். வண்டி ஆனந்தா தியேட்டர் பக்கமாய் ஓட்டிச் சென்று நிறுத்தினார். மதுரைக்கு செல்லும் பி,ஆர்,சி பேருந்து கடந்து கொண்டிருந் தது.அதிகாலைஎன்பதால்மனிதநடமாட்டம்குறைந்திருந்தது.
சாலை ஓர பூ வியாபாரிகள் புத்தம் புதிதாய் வெண் பனியில் நனைந்த மலர்க ளை ஒன்றினைத்து மாலை தொடுத்துக்கொண்டிருந்தனர். மாட்டு வண்டியில மந்திருந்த பெரியப்பா பாலுவைப்பார்த்து ‘’டேய் கொட்டாய்ட்ட இரு நா போயி தூப்பு மாறு எப்பீட்டு வர்சுறேன்’’என சொல்லியவாறு வண்டியிலிருந்து குதித்து தியேட்டருக்கு பின் உள்ள ரயிலடி சந்துக்குள் நுழைந்தார். அவன் தியேட்டர் வாசலில் போய் நின்றான். மாடு கால்களை மாற்றி, மாற்றி உலுக் கியது, வலது கண்ணீல் ஏறிக்கொண்டிருந்த ஈயை இமையால் விரட்டியது. தியேட்டர் விளம்பர பலகையில் ‘’மைக்கேல்ராஜ்’’ என்ற வால் போஸ்ட்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதன் மீது நாயகன் ரகுவரன் மோட்டார் வாகனத்தில் பயணிப்பதுப் போன்ற காட்சியும், நடிகை ரஞ்சனி முகம் வியர்க்க பயந்த சுவாத்தில் பாவனை செய்தப்படி இருந்தது. வால் போஸ்ட்டரின் கீழ் பகுதியில் நடிகர், நடிகையின் பெயரும், படம் போட்ட நாளை ஊதா வண்ணத்தில் 24.2.87. என குறிப்பிட்டு எழுதி ஒட்டிருந்தது.
சந்திரா பட, படப்போடு நின்றிருக்கையில் மேஸ்திரி அலுவலகத்துக்குள்ளியி ருந்து வெளியே வந்து அவளை ஏற, இறங்க பார்த்து விட்டு ‘’ஏத்தா ஒம் பேரு என்ன சொன்ன’’ முன்பு போல் இல்லாமல் குலைந்தப்படி கேட்டான். அவன் கேட்ட தோரனை அவளுக்கு சந்தேகத்தை கிளப்பி னாலும் பயம் குறைந்ததாக தோன்றியது. அதனால் இயல்பாக பதிலளித் தாள்.
‘’சரி,சரி அப்பவெ சொன்னைலே நா மறந்துட்டேன் அய்யாட்டே சொல்லிட்டே ன் புதுசா வந்துருக்கேன்னு நாளப்பின்ன ஒழுங்கா வரப் பாரு இன்னைக்கி அய்யா ரூம்ப கூட்டி விட்டுட்டு தண்ணி எடுத்து வைச்சிட்டு போ’’ என சொல்லி விட்டு அவனின் பி,எஸ்,ஸி சைக்கிளில் ஏறி சென்று விட்டான்.
அவள் அலுவலகத்துக்குள் தயங்கியபடி சென்று ஒரு கனம் நின்றுப் பார்த்தாள் ஆய்வாளர்பெயர்பதிவேட்டில்துணைகையொப்பம்இடுகைசெய்துக் கொண்டி ருந்தார். இவள் தலை குனிந்து வார்த்தை வந்தும் சொல்ல முடியாமல் மனதுக் குள் முனங்கிக் கொண்டே வணக்கம் வைத்தாள். அவர் கவனிக்கவில்லை அவள்அதற்கு மேல் நிற்காமல் தன் கடமையை செய்திட அலுவலக கழிவறை க்குள் நுழைந்து குச்சி மாரை எடுத்து கழிவறையை அவசர, அவசரமாக அலசி அகற்றிவிட்டு, மூலை யிலிருந்த ஈஞ்ச மாரை எடுத்து அறையை பெருக்கினாள்.
நேரம்கடந்ததுஅவள் பயந்தப் படி எதுவும்அங்கு நடந்துவிடவில்லை அதனால் பலகிய மாட்டைப் போல் இயங்கினாள்.
ஆய்வாளர் அமர்ந்திருக்கும் மேஜைக்கடியில் கூட்ட வேண்டும் தயங்கி நின்றாள் அவள் நிலையறிந்த ஆய்வாளர் எழுந்து கூட்டுவதற்கு வழி தந்தார் அவள் மேஜைக்கடியில் தலையைக் கொடுத்து கூட்டிக் கொண்டிருந்தாள்.
ஆய்வாளர் பின் நகன்று முன் கதவை தாழிட்டார் அது அவளுக்கு கேட்க வில்லையென்றாலும் அறையில் படர்ந்திருந்த வெளிச்ச கீற்றுகளின்றி இருள் படர்ந்தமையால் தன்னிலையடைந்து மேஜைக்குள்ளியிருந்து தலையை வெளியே எடுக்க முற்பட்டாள் ஆனால் அவளுக்குள் மின்னல் கீறியது என்ன வென்று அலுவலரை சந்தேகித்து தலை தூக்கி பார்க்க கூடாது ஒரு நேரத் துக்குஅவர்கதவை சாத்தி விட்டு வெளியில் சென்றிருக்கலாம் என நினைத்துக் கொண்டு வேளையில் மும்பரமானாள்.
ஆய்வாளர் அவள் பின் புறம் வந்து நான்காம் முக பிளவை வருடினார். அவள் சர்ப்ப தீண்டலுக்கு ஆட்ப் பட்டவளாய் துடி, துடித்து முன் பகுதி மேஜை காலில் முட்டி மோதினாள். அவள் மேஜைக்கடியில் மாட்டிக் கொண்டாள். அவளின் பின்புலம்ஆய்வளரிடம்மாட்டிக்கொண்டது.திமுறினாள். திண்டாடினாள், கத்தி னாள்.அவள்சத்தம் அறையில் மோதி சாளரமும், கதவுகளும், மரக் நாற்காலிக ளும், மேஜையும்,பேரடுகளும் சிரித்தது. ‘’புதுசா கத்துர நாங்க இது மாதிரி எத்தனபார்த்திருப்போம்என்ன புதுசு அதான் கத்துர கத்தாதே கத்துக்கோ அப்பத் தான் ஒம் முன்னோர்கள் போன்று நீயும் வாழ முடியும்’’ என்று ஆலோசனை கள் வழங்கியது உயிரற்ற சடங்கள். அவள் திமிறிக்கொண்டு மேஜைக்கடியில் போராடினாள். அவர் கைகளில் இரண்டாம் முகங்கள் நசிங்கிக் கொண்டே யிருந்தது. முட்டி மோதியவளின்மூக்குமேஜைக்காலில்முட்டிரத்தம் கசிந்தது.
ஆய்வாளர் அவளை அவர் காலுக்கடியில் மடக்கிக்கொண்டு பாதம் தழுவி யிருக்கும்சேலையைதூக்கிபின்முதுகில்லாபகமாய்போட்டார்.அவள்அணிந்தி ருந்தசிகப்புநிறஉள்பாவாடைபாதிகிழிந்து,அதில்வெள்ளைநூலால்கொங்கானி ப் போட்டு தைத்திருந்த வறுமையின் கோரத் தாண்டவம் உள்ளாடையில் உணர்த்தியும், கேட்க நாதியற்ற ஏழைப் பெண்ணின் வாழ்வை சீரளிக்கப் போகிறமே என்ற குற்ற உணர்வு ஆய்வாளரை ஒரு நொடி உணர்த்தினாலும். விரட்டிச் சென்ற விலங்குக்கு கால் முறிந்து விட்டால் கருணைக் காட்டி விட்டு விடுவானா வேட்டைக் காரன் அவனுக்கு மேலும் ஓட முடியாமல் திணறி நிற்பது எப்படி வசதியாக இருக்குமோ அது போன்று தான் சந்திராவின் நிலையும்.
அவள்நீண்டபோராட்டத்துக்குப்பின்துவண்டாள்அதைபயன் படுத்திக் கொண்டு அவர் நிதனமாய் அவர் துவண்ட குறியை எடுத்து அழுத்தாரம் பித்தார். ஆனால் அவர் வேகத்துக்கு அது கட்டுப்பட வில்லை அதனால் அதைதயார் செய்திட அவர்மனசுக்கும்உறுப்புக்கும்முடித்துப்போட்டுலயித்திருந்தார்.அவள் விழிக்க ஆரம்பித்தாள். அவள் முன் மேஜைக் காலின் பிடியை அழுத்திப் பற்றிய படி பின் வலது காலால் விட்டால் ஒரு எத்து அவர் குறியில் அவர் அப்படியே உட்க்கார இவள் அந்த கணத்தில் எழுந்து மறு படி ஆய்வா ளருக்கு அடப்போடு மீண்டும் ஒரு எத்து விழுந்தார் சுவரோடு. கூண்டிலிருந்து பறவை சிறகடித்து பறந்தது.
சற்றுநேரத்துக்குமுன்பு சந்திராவைப் பார்த்து சிரித்த உயிரற்ற சடங்கள் முதன் முறையாக ஆய்வாளரைப் பார்த்து கொக்கரித்தது. அதனால் ஆத்தரம டைந்த ஆய்வாளர் எழுந்து வெளியே ஓடிக் கொண்டிருக்கும் சந்திரவை கவனித்தார் அவள் அவிழ்ந்த சேலையை அரை குறையாய் தூக்கிப் போட்டுக்கொண்டு அலுவலக வளாகத்தை கடக்க எதிரில் பெரியப்பாவும், பாலுவும் அலுவலகத் தில் தூப்பு மார் எடுக்க வந்தவர்கள். அவளை கவனித்தனர். அடிப்பட்ட பாம் பான ஆய்வாளர் அவளை தொடர்ந்து விரட்டி வர பெரியப்பா நிலை குலைந்து சாட்சியாக நின்றார். ஆய்வாளர் கத்தினார்.
‘’யேய் மாரியப்பா அவளே புடி’’
‘’என்ன எசமான்’’ என அவசரமாய் கேட்பதுப் போல் பாவித்தார் பெரியப்பா.
‘’மோதுரத்த தூக்கிட்டு ஓடுறா’’ எனச் சொன்னார். அவள் அவர்களை கடந்து ஓடிவிட்டாள்.
14 ஏப்., 2015
மேடை,,,,,,,(பாகம் 1)
ஞாயிற்றுகிழமையின்இறுதிதுளிகள்,துளிர்த்திடும்,ஒலிதேவாலாயமணியோசையால்உணர்த்தியது.
அம்மன் கோயில் திடல் ஆயிரமாயிர மனித தடயங்களை மொளனமாய் சுமந்தப்படிஉறைந்துக்கிடந்தது. அன்னைபராசக்தியும்,வெயிலுகந்தம்மனும், அன்றேய தினத்தில் பக்தர்கள் வைத்துச்சென்ற கோரிக்கைக்களைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்க,வாலசுப்பிரமணியனும், சர்வேஸ்வரனும், நவீன திருவிளையாடலுக்கான,ஒத்திகை
பார்த்துக்கொண்டிருக்க,தன்னெளியற்ற நிலாபந்து வான்திடலில்,மேற்குப்பக்க மாய் உருண்டுக்கொண்டிருக்க, தன் பிறந்து வளர்ந்த மண்ணிலிருந்து இடம் பெயர்ந்துக்கொண்டிருந்தான்
பாலு.
வந்தவன்நிலைக்கொள்ள,பிறந்தவன்இடம்பெயறும்கோட்பாட்டின்அடிப்படையில்சொந்த மண்ணில் தளைத் தோங் கிய ஆல மரத்தை அடியோடு பறித்து
அப்புறப்படுத்தும் அநாகரீகம் அரங்கேற்றமாக, அடுத்த கட்டத்திற்கு ஆய்த்தமாக நகர பேருந்து
நிலையத்திற்கு விரைந்தான் பாலகிருஷ்ணன் என்ற பாலு.
தனக்கு
மணைவி, குழந்தைகள் என குடும்ப தலைவனாய் இருந்தாலும், சூழ் நிலையின் சூட்சுமத்தில் மாட்டிக்கொண்டதால்
குழந்தையைப்போல் கத்தி அழுவதை தவிர ரொளத்திரத்தை வேறோரு வடிவத்தில் வெளிப்படுத்த இயாளாமல்,
கண்ணீர் மல்க அழுதான், அழுகையின் ஒலி அவனுக்கே கேட்கவில்லை, கண்ணீரருந்திய அம்மன் திடலின்
புழுதிகள் பொரிந்தது. புழுதியின் எதிர் வினை
அவனுக்கு ஆறுதலாய் இருந்தது.
அரசு
பணியில் இடம் மாறுதல் என்பது எழுதப்பட்ட சாசனம்தான். ஆனால் விருப்ப மாறுதல், கணவன்,
மனைவி, ஒரே இடத்தில் பணிசெய்வதற்க்காண இட மாற்றம்,அல்லது பணி உயர்வுக்காண பணிமாறுதல், இவைகளைத்தாண்டி தண்டனைக்காண பணிமாறுதல். இதனடிப்படையில்தான்
பாலுவுக்கு பணிமாறுதல் கொடுக்கப்பட்டிருகிறது. எதற்கு?கையூட்டு வாங்கியதற்க்காகவா,
அல்லது கையாடல் செய்தமைக்காகவா? இல்லை அரசு பொருட்களை திருடியதற்க்காகவா? இவை எதுவும்
கிடையாது. பின்பு எதற்க்காக போக, போக தெரியும்.
அமிர்தராஜ்
திரையரங்கில், நடைப்பெற்றுக்கொண்டிருக்கும்,
பிரபு நடித்த சின்னவாத்தியார் படத்தின் இரவுக்காட்சியின் இறுதிக்கட்ட ஒலி அரங்கத்தையும்,
மீறி அதிர்ந்துக்கொண்டிருந்தது. பாலு பேருந்துக்காக காத்திருந்தான். அந்த இரவில் கூட
அவனை விடாத கருப்பாய் தொடரும், கடன்கார பிசாசுகள் தென்படுகிறார்களா என்று சுற்றும்,
முற்றும், பதட்டத்தோடு பார்த்துக்கொண்டான்.
பேருந்து நிலையத்தில் பஸ்கிடைக்காமல்அதிகாலை பஸ்க்காக கோடாங்கி அடித்து
பார்த்துவிட்டு தோழ்வியுற்றவர்களாய் மயங்கிக்கிடந்தனர், ஒரு சிலர் நம்பிக்கையோடுகாத்திருந்தனர்.
பேருந்தின் வடக்கு வாசளில் தேனீர் கடை ஒன்று மங்கிய ஒளியில் நத்தையைப்போல்
இயங்கிக்கொண்டிருந்தது. முத்து கணக்குப் போட்டான் தேனீரருந்த பணம் தேறுமா? என்று அலுவலகத்தில் பணி மாறுதலுக்கான ஆணை வழங்கியயுடன்,
அன்றேய தினமே மாத சம்பளமும் கிடைத்திருந்தது. ஆனால் அது அந்த மாதத்திற்க்கான வட்டி
கட்டுவதற்கே சரியாகிப்போனது. அடுத்த மாதத்தை
கடத்துவதற்க்கான கேள்வியோடு இருக்கையில் பணியிட மாற்றம் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும்
வட்டி கட்டியது போக இரண்டு தினங்களுக்கு செழுமையாக செலவு செய்வதற்குதான் பணம் மிஞ்சும்,
பின்பு மறுபடி வட்டிக்கு பணம் பெற்று அந்த மாதத்தின் நாட்களை கடத்த வேண்டிய அபத்தம்.
இந்
நிலையில் மாத வட்டியை கட்டிவிட்டு மீண்டும்
பணம் பெறுவதற்கு இயளவில்லை ஏன்னெளில் அடுத்த மாதம் வட்டிக்கட்ட இருக்க மாட்டான். அதே
நேரத்தில் உண்மையைச் சொல்லி கடன் கேட்டால் சட்டையை பிடித்து உட்கார வைத்து விடுவான்
கடன் காரன். இப்போது உடனடியாக வெளியூர் சென்று
பணியேற்க்க வேண்டும், கையில் நெற்றியில் வைக்கும் காலணா காசு கூட கிடையாது. என்னசெய்வது
என முழிக்கும் போது அவனை சுமந்து செல்லும் துருவேறிய மிதி வண்டி கை கொடுக்க முன் வந்தது.
பணியேற்புக்கான ஆறு தினங்களில் மூன்று தினங்களை மிதி வண்டி விற்பதில்லையே கழிந்து விட்டது.
மூன்று நாட்களில் ஆறு கடைகளில் வண்டியை காண்பித்து ‘’ இத வித்து தாங்கண்ணே’’என்பான் கடைக்காரகளிடம்.
‘’ வண்டியே நிப்பாட்டிட்டு போ யாரச்சும் கேட்டா குடுப்போம்’’ என்பார்கள். இவனும் அதன்
படி மூன்று நாட்களாய் முயற்சித்தான் பலன் இல்லை. இறுதியாக இரும்பு கடையில் நிறுப்பதற்கு உறுதியானான்.
மிதி
வண்டியை தூக்கி துலாபாரத்தில் வைத்தான். முப்பது கிலோ எடைக்காட்டியது தேய்ந்துப் போன
எடைக்கற்கள். கிலோ அய்ந்து ரூபாய் கணக்கிட்டு
நூற்றி ஐம்பது ரூபாய்க்கு நூறு ரூபாய் பத்து பழைய தாள்கலாகவும், ஐம்பதுக்கு
சில்லரை காசுகளாகவும் கடைக்காரர் தந்தார். அதை மூன்று நாள் ஏக்கத்தோடு பெற்றுக்கொண்டு,
ஒரு வாரத்திற்க்காண குறைந்த பட்ச உணவு பொருட்க்களை வாங்கி வந்து வீடு சேர்த்தான்.
உணர்வு
பெருக்கிலும், இயாளாமையின் கோர வடுவிழும் உடலதிர தேம்பினாள் பாலுவின் மனைவி சந்திரா. யாருக்கு யார்
ஆறுதல் சொல்லி தேற்றுவது பெண் கண்ணீரால் சகலவற்றையும்
கரைத்து விடுவாள், ஆனால் ஆண் மென்று முழுங்குவான் அது வோறொரு வடிவத்தில் தலைத்தோங்கும். வலது கண்ணத்தில் வழிந்த
கண்ணீரை இடது கரத்தால் துடைத்து விட்டு கேள்வியாய் அவனை பார்த்தாள். அதற்கு அவன் பதில்
சொல்லுமளவுக்கு பக்குவமான மன நிலையில் இல்லை. அதனால் மெளனமாய் விட்டிலிருந்து வெளியேறியது
இன்னும் ரணமாய் வழித்துக்கொண்டிருந்தது. ஆணும், பெண்ணும் ஆசையாய் இணைந்து அன்பின் சாட்சியாய் குழந்தைகளை ஈன்றெடுத்து அவர்கள் விரும்பமின்றியே இந்த உலகத்துக்கு அறிமுகம்
செய்து வைத்து பின்பு அவர்களின் எதிர் காலம் என்ற மாய உலகத்துக்குள் பிவேசிக்க அவர்களை நடத்தும் விதம் எவ்வளவு மன சோர்வையும், உளச்சளையும்
உருவாக்குகிறது. குழந்தைகளை, தாவரங்களைப் போல், பறவைகளைப் போல் சுதந்திரமாய் வளர அனுமதிக்கிறோமா? நம்முடைய கடந்துப் போன நிறைவேறாத ஆசை அபிலாசைகளை
அவர்களின் பிஞ்சு மனங்களில் வழுக்கட்டாயமாக திணிக்க பெற்றோர்கள் படும் பாடு அவர்களை
சுயமாக சிந்திக்க விடாமல் எல்லாவற்றும் நம்மிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்ற
நிர்ப்பந்தம், இதனால் குழந்தைகள் சுயத்தை இழந்து
சிறு நீர் கழிப்பதுக்கு கூட அனுமதிக்காக காத்திருந்து, காத்திருந்து, எல்லவற்றையும்
பெற்றோர்கள், பாது காவலர்கள், ஆசியர்களை, சார்ந்தே வாழ்க்கையை துவக்க கற்றுக்கொள்வதால்,
அவர்கள் காலம் தோறும் மற்றவர்களை சார்ந்தே வாழ நேரிடுகிறது.
இதன்படி
பாலுவின் பிள்ளைகள், முதல் பெண் தாமரை, இரண்டாவது, பெண் கனிமொழி, மூன்றாவது பையன் பாரதி,
வீட்டின் நிலை என்ன என்பது தெறியாமல் உறங்கிக்கொண்டு இருக்கும் போது பாலு வெளியேறினான்.
சைக்கிள்
விற்பனை செய்த பணத்தில் நூறு ரூபாய் வீட்டுக்குப்போக, மீதி மனைவி சந்திரா ஐம்பது ரூபாய்
கொடுத்ததில் கணக்குப்போட்டான்.
முந்திய நாள்
அலுவலக நண்பர் மதுவிடம் கேட்டதை நினைத்துப்பார்த்தான். ‘’நாகர் கோவிலுக்கு துருவா போனா
முப்பது ரூபா திருநெல்வேலி இறங்கிப் போனா முப்பத்திரென்டு
ரூபா’’ என சொன்னதை சிந்திக்கையில் மீதி பனிரென்டு
ரூபாய் இருப்பது தெளிவானதும் தைரியமாக தேனீர் கடைக்கு சென்றான். ‘’டீ ரெண்டு ரூபா,
கோல்டு ப்ளாக் பிலேன் ஒரு ரூபாய் பத்துக்காசு செய்யது பீடி கட்டு ஒன்னு அம்பது மொத்தம் நாலு அறுபது ஆகுது மீதியும் இருக்கு’’ என்ற
கணத்த நம்பிக்கையோடு தேனீர்க்கடை உரிமையாளரிடம் சென்று பணம் செலுத்த
நின்றான் அவர் கல்லாவுக்கு முன்பாக கவிழவும், பின்பு நிமிரவுமாய் இருந்தார்.
பாய்லர்
முன்பாக நிற்கும் தேனீர் தாயாரிப்பவர் தூக்க போயை விரட்ட சிப்பி பீடியை கரைத்துக்கொண்டிருந்தார்.
‘’ஒரு
டீ’’ என்றான் பாலு.
பீடியை
இழக்க தயாராக இல்லமல் பற்களில் கடித்தப்படியை தேனீர் போட்டுக்கொடுத்தார். வாங்கி அருத்தியவனுக்கு இனிப்புப் பற்றாக்குறையால் துவர்ப்பாய் இருந்தது.
‘’சீனி
போடுங்க’’ க்ளாஸை நீட்டினான். அரை கரண்டி போட்டார். வாங்கி அருந்தினான். சாக்ரிம் தூக்கலாய்
இருந்தது,
‘’அண்ணே
டிக்காசன் ஊத்துங்க’’ டீ சாரை பிளிந்து விட்டார்
இவன் தொந்தரவால் பீடி அணைந்து விட்டது. அதையே பற்ற் வைக்காமல் வாயிருந்தப்படியே
தூ என துப்பிவிட்டு அடுத்த பீடியை கடுப்போடு
பற்ற வைத்தார். தேனீரருந்திய வாய்க்கு அடுத்து புகை தேவைப்பட்டதால் சிகரெட்டும் பீடி
கட்டையும் வாங்கி எதை பற்றவைப்பதென்று சிந்தித்தான். எப்போதும் பெரும் பான்மைத் தானே வெற்றி பெறும்
அதனால் வெள்ளைகே ஒட்டு விழுந்தது சிகரெட்டை பற்ற வைத்து இழுத்து விட்டான். வெளியேறிய
புகையோடு மன உளச்சலும் வெளியேறி விட்டதாக நம்பினான். அப்போது பாண்டியன் வந்தது. கோயில்பட்டி
என இருந்தமையால் அவசரப்பட்டு சிகரெட்டை காலில்ப் போட்டு அணைக்க வில்லை ஒரு சிலர் ஓடிச்சென்று
ஏறினார்கள். அதன் பின்பாக கே, டி, சி வந்தது, தூத்துக்குடி, தூத்துக்குடி,
என அந்த இரவிலும் பேருந்து ஏஜென்டு கத்தினார். அவருக்கு பின்பாக நகராட்சியின் ஊழியர்
பஸ் வந்து செல்வதற்க்கான வரி பணத்துக்கு பஸின் முன்பாக நின்றார் உடனே பாலு சிகரெட்டை
அனைக்கவில்லை பின் பக்கமாய் மறைத்துக்கொண்டான்.
அவர் அவனை கண்டு கொள்ளவில்லை அதனால் அவனுக்கு அது வருத்தமழித்தது. அவரிடம் அவன் என்ன பத்தமடை பாய் விரித்து சம்மந்தம் பேசியா அவர்
மகளை மணம் முடித்தான். மணம் கொண்டது மாளிகை என்று அவர்களாகவே முடித்துக்கொண்டார்கள்.
சிறிது
நேரமாய் எந்த பஸ்களும் வர வில்லை புக் ஸ்டாலில்
நின்று மாமனாரை கவனித்தான் அவர் வசூல் செய்த காசை கை பையில் போட்டு விட்டு காக்கி சீருடை சட்டை பையிலிருந்து சிகரெட்டை எடுத்து
பற்ற வைத்து இழுத்தார். பாலுவுக்கு பொறமையாக இருந்தது. அவன் அவருக்கு மரியாதை கொடுக்கிறேன்
என்று சிகரெட்டை கரைத்து விட்டான். பீடிக்
கட்டை உடைத்தான் ஒன்றை உருவி எடுத்துக்கொண்டு
பழையப்படி தேனீர் கடைக்கு வந்து சிமிழி விளக்கில்
சிகரெட்டு அட்டை பேப்பரால் பற்ற வைத்து இழுத்து விட்டான் புகையோடு இருமலும்
சேர்ந்து வந்தது. அப்போது திருவள்ளுவரும் வந்து விட்டார். முன்பை போலவே ஏஜென்டு ‘’நாகர்கோவில்,
நாகர்கோவில்’’ என கத்த சந்திராவின் அப்பா பஸ் முன்பாக நிற்க பாலு பஸ்க்குள் ஏறிக்கொண்டான்
அவர் இப்போது நன்றாக கவனித்தார். அது அவனுக்கு போதுமானதாக உணர்ந்தான்.
‘’எங்க
போனும்’’ வேண்டா வெறுப்பாக கேட்டார் நடத்துனர்.
‘’
நாகர் கோவில்’’ என்றான் அது அவருக்கு திருப்த்தியாக இருந்தது. பேருந்தின் இரு மருங்கிலும்
இருக்கைகளை ஆராய்ந்தான். ஓட்டுனருக்கு பின்பு உள்ள இருக்கையும், முன் படிக்கட்டு முன்பாக
உள்ள நான்கு பேர் அமரும் இரண்டு இருக்கைகளும்
காலியாக இருந்தது. பாலு வேகமாக முன் இருக்கையில் அமர முயலுகையில் நடத்துனர் பாகிஸ்தான் எல்கையிலிருந்து இந்திய எல்கைக்குள் ஊடுறிவிய
தீவிர வாதியை விரட்டு வதைப் போன்று விரட்டினார். அவனுக்கு கொபம் கொப்பளித்தது, ஆனால்
அடக்கிக்கொண்டு நடத்துனர் சுட்டிக்காட்டிய பின் சக்கரத்தின் மேலுள்ள இருக்கையில் அமர
வேண்டிய நிர்பந்தம். இரு இடம் காலியாக இருந்தது. சக்கரத்தின் மேலுள்ள இருக்கையில் அமர்ந்தால்
சாளரத்தின் வழியாக காற்றயும், இனிதான இயற்கை எழில்களையும் தரிசித்துக்கொண்டே செல்லலாம்,
ஆனால் கால் முடக்கி அமர வேண்டும் கால்கள் வலிக்கும் பக்கவாட்டில் அமர்ந்தால், அயரும் போது
சரிந்து விழ நேரிடும் அதனால் பின் உருளி பட்டை மீதுள்ள இருக்கையில் அமர முடிவெடுத்து பயண பையை
பொருள் வைக்கும் இடத்தில் இடுக்கு கிடையில் அவனுடைய பையையும் தினித்துவிட்டு
‘’ அப்பாடா’’ என இமாலய சாதனை புரிந்தவனாக சாளரத்தின் கண்ணாடி மீது தலை சாய்ந்தான்.
நடத்துனர்
துலுக்கப்பட்டியை தாண்டியவுடன், பயணிகளுக்கு பயண சீட்டு கொடுக்க வந்தார் ஒவ்வொரு ஸ்டேஜ்க்கும்
உள்ள கட்டணச்சீட்டை பரிசோதித்து ஒவ்வொன்றையும்
தனிதனியாக கிழித்து அதில் துளையிட்டார். பாலுவுக்கு ஒவ்வொரு சீட்களையும் கிழிக்கும்
போதும் கிளியுண்டானது. எட்டி எட்டி பார்த்து
நம் பட்ஜெட்க்குள், அடங்குமா? அல்லது மீறுமா?
என பதட்டத்தில் இருந்தான். நடத்துனர் மீண்டும் ஒரு முறை சீட்டுக்களை உற்றுக்கவனித்துவ்விட்டு கொடுத்தார்.
பெற்றுக்கொண்டவன் இப்போது சரியாக கணக்கிட்டான்.
பதினோரு,
ரூபாய்க்கு ஒரு சீட், ஒன்பது ரூபாய்க்கு ஒரு சீட், நான்கு ரூபாய்க்கு ஒரு சீட், எழுபது
காசுக்கு ஒரு சீட், என இருந்தது. அதை பார்த்து மூன்று தினங்களுக்கு பின் முதன் முறையாக
ஆசுவாசமடைந்தான். அலுவலக் நண்பர் போட்ட கணக்கும், அவன் போட்ட கணக்கும், நலிவடைந்தது.
பாலு நிறைவாக கட்டணம் செலுத்தி பயணச் சீட்டை பெற்றுக்கொண்டு இரண்டாவது முறையாக ஆசுவாசமாய்
இருப்பிட சாய்வுக்கட்டையை இழுத்துவிட்டு நன்றாக சாய்ந்துக்கொண்டு கண்களை மூடினான்.
காற்றாற்று வெள்ள பெருக்கால் அடித்து வரப் பெறும் அடையாளமற்ற
பொருட்க்கள் நீரில் மூழ்கி சில நாட்களுக்குப்பின் அதன் தடிமத்துக்கேற்றப்படி
வெளிப்படுவதைப்போல் கடந்தவைகள் வெளிப்பட்டன ஆனால்
ஒன்றன் பின் ஒன்றாக வரிசை கிரமமாக இல்லாமல்
உயரமான மலை சிகரங்களிலிருந்து கொட்டிடும் நீர் திமிலைப்போல் ஒழுங்கின்றி வழிந்து கொட்டியது.
ஒவ்வொன்றாய் ஆய்ந்து சேகரிக்க நினைத்து காலி பாத்திரமாய் அவனையாக்கிட முயற்ச்சித்தாளும் துக்கமும், ஏக்கமும், ஏமாற்றமுமாய் துரோகத்தின்
படிமங்கள். நிறைந்து வழிந்து கொண்டே இருந்தது.
அதனால் அவன் எல்லவற்றிலுமிருந்து விலகி செல்ல நீர் பரப்பில் புதியதாய் நீந்திக்கடக்கும்
சிறுவனாய் தத்தளித்தான்.
எதைப்பற்றியும்
நினைக்காமல் ஒரு யோகியைப்போல் ஐம் புலன் களையும்
அடக்கிட முயற்சித்தான். லெகிக வாழ்வை கடந்தவன் எளிதில் தப்பித்துச் சென்று விட முடியாது. வாழ்வின் சகல விதமான பரிணாமங்களும்
பூதகரமாய் எழுந்தாடியது.
கடந்த
மூன்று தினங்களுக்கு முன்புதான் பிள்ளைகள் பயிலும் பள்ளியின் புதிய சீருடைகள், கல்வி
தளவாடங்கள், என அனைத்தும். அலுவலகத்தில் இடைக்கால
கடன் பெற்று வாங்கி தந்து விட்டு வறுமையே இனி பக்கம் வராதே, நான் கடந்த ஆண்டுகளைப்போல் இந்த
கல்வியாண்டில் யாரிடமும் யாசகம் கேட்டு படியேற வில்லை என்னுடைய அலுவலக மாதாந்திர சேமிப்பில்
கல்விக்கான தேவைகளை பூர்த்தி செய்து என் குழந்தைகளை ஆனந்த களிப்பில் ஆழ்த்தி விட்டேன்.
என அமைதியான அடர்ந்த வனத்தில், மேகம் தழுவி
நிற்கும் முகட்டிலேறி உச்சஸ்தாயில் கத்தி கூச்சலிட்டான்
அதன் ஒலி கூட இன்னும் அந்த வனத்திலிருந்து மங்கிடவில்லை அதற்குள், பாவிகள் பணிமாற்றம்
என்ற மாய வலையில் என்னை சிக்க வைத்து அரைகுறை அடி வாங்கிய சர்ப்பம் காற்றுக் குடிக்க உடலில் மிச்சமிருக்கும் கொஞ்ச, நஞ்ச காற்றால் உஸ்..
உஸ்.. என சீறிக்கொண்டு நெளிவதைப்போல் பாலுவின்
நிலையுண்டானது.
பணி
மாற்றம் என்ற மாய பிசாசால் புதிய ஊர், புதிய பள்ளி. அங்குள்ள பாடத்திட்டப்படி கல்வி
தளவாடங்கள். வாங்க வேண்டும் இவைக்களை கடந்து
புதிய நகரத்தில் எங்கு சேர்ப்பது, யாரிடம் பொய்யாய் சிரிப்பது, அல்லது பாவமாய்
பாவித்து யாசகம் கேட்பது.
தனியார்
பள்ளி என்றால் அந்த பள்ளியின் கல்வி தந்தையின் சாதியை சார்ந்தவனாக இருக்க வேண்டும்.
இல்லயெனில் அவர் சார்ந்த மதத்தை சார்ந்தவனாகவாது இருக்க வேண்டும். இவை எதுவும் இல்லையென்றால் பாக்கிய லட்சிமியின்
பங்காளியாகவாது இருக்க வேண்டும். இவைகளில் எது குறைந்தாலும் என்ன நிகலுமென்பது, அனுபவித்தவர்களுக்கே
வெளிச்சம். எதுவும் இல்லையென்றாலென்ன? கடவுளின்
பிள்ளைகளான விளிம்பு நிலையினர்களுக்கும், முதல் தலை முறை கல்வி பயில்கின்றவர்களுக்கும்,
இருக்கவே இருக்கு அரசு பள்ளி அரசு பள்ளியென்றால் நடுத்தர வர்கத்திற்க்கு இளக்காரமாய்தான் இருக்கும்.
அரசு பள்ளிகளின் நிலமையும் படு மோசமான நிலையில்தான் இயங்குகிறது.
தேர்வு
விடுமுறையில் பணியிட மாற்றம் தந்திருந்தாலும் அடுத்த பள்ளியில் சேர்ந்துக்கொள்வது எளிதானது. ஆனால் கல்வி ஆண்டு முடிவடைந்து புதிய கல்வி ஆண்டு துவங்கி முதல் பாடத்திட்டம் சொல்லிக்கொடுக்கப்பட்டு மாதாந்திர
தேர்வுக்கு செல்கின்ற நிலையில் பணியிட மாற்றம்.
அரசு ஊழியர்களை பழி வாங்க வேண்டுமென்றால் அதிகாரிகள்
இப்படி நேரத்தில்தான் பழி எடுப்பார்கள். இது போன்று சிக்கள்களில் மாட்டிக் கொள்ளாமல்
இருக்க அலுவலகங்களில் பணியாற்றும் ஒரு சில கருங்காளிகள். அலுவலர் என்ன சொன்னாலும் மறுப்பு தெரிவிக்கமல்,
எதையும் செய்திட தயார் நிலையில் இருப்பார்கள். குறிப்பாக அவருக்கு அரிக்கும் நேரத்தில்
சொரிந்து விடவோ, அதுவும் தாண்டி ஏற்பாடுகள், செய்து தருவதற்கும் தயங்குவதில்லை. முடியாத,
அல்லது கிடைக்காத பட்சத்தில் தன் பின் புலத்தை காட்டுவதிலும், அவர் சிறு நீர் கழிப்பதற்குக் கழிப்பறைக்கு செல்லக்கூட விடாமல் தன் திரு வாயில் சொறிந்துக் கொள்வதற்கு போட்டிப் போட்டு காத்திருக்கும்
கருங்காளிகள் ஒரே இடத்தில் பணியாற்றிக்கொள்ளலாம்,
பதவி பெற்றாலும் அதே இடத்தில் பணி செய்துக்கொள்ளலாம், அரசு பணி வருமானம் போக
வேறோரு தொழிலோ, வியாபாரமோ, செய்துக்கொண்டு, தன்னையும் தன் குடும்பத்தையும் வளமாக வைத்துக்கொண்டு கடைசியில் ஓரே இடத்திலேயே
செத்தும் போய்விடலாம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)